அண்மையில் சென்னை - வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையில் 'இதய ஆரோக்கியம்' குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அதில், இதய நோய்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களையும், நமது வாழ்க்கை முறையினால் இதய பாதிப்பில் சிக்காமல் இருப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் பிரபல மருத்துவர்கள் விரிவாகவே விளக்கமளித்தனர்.

அதன் முக்கிய அம்சங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு...

நம் இதயத்தை பற்றி முதலில் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதயத்தின் பாதிப்புகளில் இருந்து சமாளிக்கத்தான் மருந்துகள் இந்த உலகில் உள்ளதே தவிர, அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது தான் முதல் உண்மை. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்... ஒவ்வொரு மருந்தும் நமக்கு உதவிகள்தான் செய்கிறதே தவிர, போரிட்டு அந்த நோயை வெள்ள முடியாது!

பைபாஸ் சர்ஜரி, ஏன்ஜியோ பிலாஸ்ட் ஆகிய சிகிச்சைகள் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கு உதவி செய்கிறது. இதயத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை தட்டிவிட்டோ அல்லது அந்த பாகத்துக்கு பதில் வேறு குழாயை வைப்பது என அனைத்தும் நம் இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு மருத்துவர்களால் செய்யப்படும் ஒரு சிறு உதவிகள் மட்டும் தான். இதில் பேஸ்மேக்கரும் விதிவிலக்கல்ல.

ஆண்டுதோறும் ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆசியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயது முதல் 26 வயதுக்குள் இருப்பவர்களும் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இதயக் கோளாறா என்று நீங்கள் ஆச்சரியபடுவது புரிகிறது. ஆயினும், இது நமது சமூகத்தில் புதிதல்ல என்கின்றனர், மருத்துவர்கள். ஆண்டுதோறும் பல்லாயிரம் குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது அண்மைப் புள்ளிவிவரம்.

'30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் மாரடைப்பு வரும்' என்று இன்றும் பல பேர் நம்புகிறார்கள். அது முற்றிலும் தவறு. தற்பொழுது சராசரி 26 வயதுக்குள் இருப்பவர்களும் வந்துவிடுகிறார்களாம். இந்த வயது எண்ணிக்கை மேலும் குறையலாம் என்பது வருத்தத்துக்குரிய மருத்துவர்களின் புதிய கணிப்பு.

நமது ரத்தக் குழாயில் எல்.டி.டி(Low Density Lipo) தான் நமக்கு இதய நோய் தொடர்பான குறைகளை எல்லாம் அழைத்துவரும் நண்பராக இருக்கிறது. இதைக் குறைக்கத்தான் முடியுமே தவிர, முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.

இதய நோய் பிரச்னையில் மிகவும் பரிதாப நிலை கொண்டவர்கள் யார் என்றால், சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான். இவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் கூட இவர்களுக்கு தெரிவதில்லை என்பது தான் உண்மை. காரணம்..? சர்க்கரை நோய் தாக்கியவர்களுக்கு நரம்புகள் பலகீனமடைவதால், அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்பொழுது வலி அதிக அளவில் இருக்காது. எதேச்சையாக பலவீனம், தலைசுற்று என்று பக்கத்தில் இருக்கும் மருத்துவர்களிடம் செல்லும் பொழுது மருத்துவருக்கு சந்தேகம் வந்து, இ.சி.ஜி. எடுத்துப் பார்க்கும்பொழுதுதான் அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது என அறிய முடிகிறது என்பது வேதனையான உண்மை. ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்றுக் களைப்படைந்தாலும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சாதாரண மனிதர்கள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுவே சர்க்கரை நோய் தாக்கியவர்களாக இருப்பின், கண்டிப்பாக 2 அல்லது 3 மாததுக்கு ஒரு முறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்துக்கான ஒரே மருத்துவரை தேர்ந்தெடுத்து, அவரிடமே சிகிச்சை செய்து கொள்வது மிக மிக அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்... நமது உடலில் கெட்ட ரத்தம் (Bad Blood), நல்ல ரத்தம் (Good Blood) என இரண்டு வகையாக ரத்தத்தை மருத்துவ நிபுணர்கள் பிரித்துக் கூறுகிறார்கள். உதாரணமாக, நமது கையின் மேல் இருக்கும் கருப்பான நரம்புகள் அனைத்தும் கெட்ட ரத்தத்தைதான் கொண்டு செல்கின்றது. இதை நீங்கள் தொட்டுப் பார்த்தால், உங்களால் ஒன்றுமே அரிய முடியாது. இந்தக் கெட்ட ரத்தம் முழுக்க முழுக்க குறைந்த அழுத்தம் (Low Pressure) வகையை சேர்ந்ததால் தான் உங்களால் இதன் தன்மையை உணர முடியா நிலை ஏற்படுகிறது.

நல்ல ரத்தம் எங்கேதான் ஓடுகிறது என கேட்கிறீர்களா? நம் உடலில் எல்லா பாகங்களிலும் இந்த இரண்டு வகை ரத்தங்கள் சென்று வந்து தான் கொண்டிருக்கிறது. நம் கை உள்ளங்கை கீழே இருக்கும் நரம்பின் இடையில் ரத்த ஓட்டத்தை தொட்டுப் பார்த்தால் இதன் துடிப்பை நீங்கள் நன்றாக உணரலாம். இதற்கு காரணம் இந்த ரத்த நரம்புகள் உயர் அழுத்தத்தை (High Pressure) சேர்ந்ததுதான். உங்கள் காய்ச்சலுக்கு டாக்டர்கள் உங்கள் கையைப் பிடித்து பல்ஸ் பார்ப்பதை அறிந்திருப்பீர்கள். அவர் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் இருக்கும் வாட்சைப் பார்ப்பார். இத்தனை வினாடிக்கு இத்தனை துடிப்புகள் என கணக்கு வைத்து உங்களின் உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு என்பது முதற் கொண்டு நன்கு அறிந்து, அதற்கு தகுந்த மருந்துகளை கொடுப்பதும் இந்த நல்ல ரத்தம் ஓட்டத்தை வைத்துதான்.

ஒரு மனிதனுக்கு சராசரி உயர் ரத்த அழுத்தம் 120/80 இருக்க வேண்டும். வயதுக்கேற்ற வகையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 40 வயதிலும் இதே அளவு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த வயத்துக்குப் பிறகு ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

நீங்கள் நடக்கும்பொழுது அதிகமாக மூச்சு வாங்கினாலோ அல்லது உங்கள் கண்கள் தலையை சுற்றுவது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டாலோ நீங்கள் உங்கள் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். (நடந்து கொண்டிருக்கும் போதே திடீர் இதய பாதிப்பால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து ஏற்படும் மரணம் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்க.)

இயன்றை வரையில் நெய் வகை இனிப்புகளை சுவைப்பதைத் தவிருங்கள். ஐ.டி. முதலிய துறைகளைச் சேர்ந்தவர்கள் நொறுக்குத் தீனியாக இனிப்பை மிகுதியாக சாப்பிடுவதால், எல்.சி.டி. கொழுப்பு அதிகரித்து, வயது வித்தியாசமினிறி இதயம் பலகீனமாக்கும் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

"நானெல்லாம் காலையில் எழுந்ததும் வாக்கிங் பொயிடுவேன். அப்பறம் தான் உடற்பயிற்சி," என்று அதிகாரமாக சொல்பவராக நீங்கள் இருந்தால்... அது நோ யூஸ்! காலையில் எழுந்ததும் சிறிது வார்ம் அப் செய்ய வேண்டும். முதலில் தலையில் ஆரம்பித்து, அடுத்து தோள்கள், முக்கியமாக இடுப்பை முன்பும் பின்புமாக நன்றாக வளைத்து, இறுதியாக நமது பாதங்களுக்கு சிறு பயிற்சி கொடுத்த பிறகுதான் ஜாகிங் அல்லது வாக்கிங் செய்யவேண்டும். இப்படி செய்தால்தான் நீங்கள் நினைத்த மாதிரி உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடியும். இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

அதிகாலையில் எழுந்ததும் சுடச்சுட பால் ஆடையுடன் பாலோ அல்லது டி, காபி குடிக்கும் நபராக இருந்தால், தயவு செய்து அதை மறந்துவிடுங்கள். எருமைப் பாலை விட பசும்பால் குடிக்கலாம் அல்லது புரதச்சத்து குறைந்த பாலை தேர்ந்தெடுத்துப் பருகலாம். எதை குடித்தாலும் பாலாடையை எடுத்துவிட்டு, சற்று தண்ணீர் நிலையில் இருக்கும் பாலை குடிப்பதுதான் நல்லது. இதில் 18 வயது வரை இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் உட்கார்ந்த நிலையில் சில பயிற்சிகளை செய்யலாம். 3 மாதம் பிறகுதான் மற்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். உடலை வளைப்பது, குனிவது போன்ற பயிற்சிகளை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்.

ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டவருக்கு சலிப்பிடித்து இருமல் ஏற்பட்டால், இதயத்தில் சிறு கணம் கொண்ட தலையனையை இதமாக அனைத்துக் கொண்டுதான் இரும வேண்டும். அதேநேரத்தில், அதிகப்படியாக 1 கிலோ அல்லது 1 லிட்டர் கணத்தைத்தான் தூக்க வேண்டும். கண்டிப்பாக பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் சர்ஜரி முடிந்து, 3 மாதங்களுக்கு மட்டும்தான். 6 மாதம் வரை சரியாக கடைபிடித்துவிட்டால் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

அசைவ பிரியர்களுக்கு மீன் மட்டும் தான் இதயத்துக்கு பலம் கூட்டும் சக்தியாக இருக்கிறது. அதற்காக, எண்ணெய்யில் பொறித்த மீன்களை அள்ளி சாப்பிடுவதும் தவறு. குழம்பு மீன்களை பிளேட் பிளேட்டாக உள்ளே தள்ளுவதும் தப்பு. வாரம் இரண்டு முறை ஒரு மனிதன் 100 கிராம் அளவில் தான் மீன் உண்ண வேண்டும்.

வீட்டில் ஒரே எண்ணெய்யை சமைப்பதும் முற்றிலும் தவறு என்று கூறும் மருத்துவர்கள் நல்லெண்ணை, கடலெண்ணை, மற்றும் தேங்கா எண்ணையை சரி அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையை பாட்டிலுடன் சாய்த்து உபயோகப்படுத்துவதற்கு பதில் டீஸ்பூன்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்தது.

கொள்ளூ ரசம் மற்றும் அன்னாச்சிபழம் நம் இதயத்துக்கு உற்ற நண்பர்கள். இவற்றை வாரம் 2 தடவை சுழற்சி முறையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதே போல் வெந்தயம், ஆரேஞ்சு பழங்கள் மற்றும் எலுமிச்சை பழங்களும் எடுத்துக் கொள்ளலாம்.

"ஹலோ சார் நான் இதை எல்லாம் கரெக்டா செய்கிறேன், இதனுடன் டிரெட்மில்லில் தினமும் ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் சூப்பரா வேர்க்க வேர்க்க ஓட்டம் எடுப்பேன்," என்று மார்தட்டி சொல்கிறீர்களா?

சோ சாரி சார்... ஒரு மணி நேரத்துக்கு 6.5 கிலோமீட்டர் தான் உங்கள் நடை பயணம் இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் 35 வயதுக்குள் இருந்தால் தான் வெயிட்களை தூக்கி பழகலாம். 35 கடந்தவர்கள் வெறும் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது.

அதிகபடியான மகிழ்ச்சி மற்றும் துக்கங்களில் நம்மை நாமே ஆழ்த்திக் கொள்வது மிக மிக தவறு. எப்போதும் சாதாரண மனநிலையிலேயே இருக்க வேண்டும். எதிலும் 'டேக் இட் ஈஸி' பாலிஸிதான் பெஸ்ட்!

"ஹய்யோ எனக்கு பைபாஸ் சர்ஜரியா?!" என்று எல்லோரையும் திகிலில் ஆழ்த்தாதீர்கள். தற்பொழுது பச்சிளம் குழந்தைக்குக் கூட இதை சர்வசாதாரணமாக நடைபெற்று வெற்றி வாகை சூடிய மருத்துவர்கள் முக்கிய நகரங்களில் இருக்கிறார்கள்.

35 வயதுக்குள் இருக்கும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால், அவரது தொடையோ அல்லது கால் முட்டியின் கீழோ இருக்கும் நரம்புகள் எடுத்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சரி செய்திருப்பார்கள். அதனால் காலின் முட்டி முதல் உள்ளங்கால் வரை கட்டுகள் போட்டிருப்பார்கள். அதை அலட்சியமாக விட்டு விடுவதும் நல்லது அல்ல. 3 முதல் 6 மாதம் வரை காலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

நம் முன்னோர்கள் சரியான நடைபயிற்சி, துணி துவைப்பது, வீட்டை மொழுகுவது, மாவாட்டுவது, நேரம் தவறாமல் உண்டது, அந்த உணவுகளை சரியாக மென்று உண்பது ஆகியவற்றால் தான் திடமாக இருந்தார்கள். அதனால், எந்த பிரச்னையை அவர்களால் எளிதில் சமாளிக்க முடிந்தது. அது மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி, சங்கடத்தை கொண்டதாக இருந்தாலும் சரி அவர்களை அதிகமாக பாதித்தது இல்லை.

ஆனால் இன்றோ... இதை நாம் எதை முழுமையாக செய்கிறோம்? அதிவேக உலகமாகிவிட்டது. எதிலும் வேகம், அவசரம். நில்லுங்கள் சற்று சிந்தியுங்கள்.

கண்டிப்பாக குடி மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முதலில் முழுவதுமாக கைவிட வேண்டும். இது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். இவ்விரண்டும் தான் இதய பாதிப்புக்கு முக்கியக் காரணிகளில் முன்னிலை வகிப்பவை.

அதேபோல், மூன்று விஷயத்தை தவிர்த்துவிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. அவை... கறி (Meat), ஹர்ரி Hurry & ஸ்கேரி (Scary).



Just go to START > RUN > type the command here

1. Accessibility Controls - access.cpl
2. Accessibility Wizard - accwiz
3. Add Hardware Wizard - hdwwiz.cpl
4. Add/Remove Programs - appwiz.cpl
5. Administrative Tools - control admintools
6. Automatic Updates - wuaucpl.cpl
7. Bluetooth Transfer Wizard - fsquirt
8. Calculator - calc
9. Certificate Manager - certmgr.msc
10. Character Map - charmap
11. Check Disk Utility - chkdsk
12. Clipboard Viewer - clipbrd
13. Command Prompt - cmd
14. Component Services - dcomcnfg
15. Computer Management - compmgmt.msc
16. Control Panel - control
17. Date and Time Properties - timedate.cpl
18. DDE Shares - ddeshare
19. Device Manager - devmgmt.msc
20. Direct X Troubleshooter - dxdiag
21. Disk Cleanup Utility - cleanmgr
22. Disk Defragment - dfrg.msc
23. Disk Management - diskmgmt.msc
24. Disk Partition Manager - diskpart
25. Display Properties - control desktop
26. Display Properties - desk.cpl
27. Dr. Watson System Troubleshooting Utility - drwtsn32
28. Driver Verifier Utility - verifier
29. Event Viewer - eventvwr.msc
30. Files and Settings Transfer Tool - migwiz
31. File Signature Verification Tool - sigverif
32. Findfast - findfast.cpl
33. Firefox - firefox
34. Folders Properties - control folders
35. Fonts - control fonts
36. Fonts Folder - fonts
37. Free Cell Card Game - freecell
38. Game Controllers - joy.cpl
39. Group Policy Editor (for xp professional) - gpedit.msc
40. Hearts Card Game - mshearts
41. Help and Support - helpctr
42. HyperTerminal - hypertrm
43. Iexpress Wizard - iexpress
44. Indexing Service - ciadv.msc
45. Internet Connection Wizard - icwconn1
46. Internet Explorer - iexplore
47. Internet Properties - inetcpl.cpl
48. Keyboard Properties - control keyboard
49. Local Security Settings - secpol.msc
50. Local Users and Groups - lusrmgr.msc
51. Logs You Out Of Windows - logoff
52. Malicious Software Removal Tool - mrt
53. Microsoft Chat - winchat
54. Microsoft Movie Maker - moviemk
55. Microsoft Paint - mspaint
56. Microsoft Syncronization Tool - mobsync
57. Minesweeper Game - winmine
58. Mouse Properties - control mouse
59. Mouse Properties - main.cpl
60. Netmeeting - conf
61. Network Connections - control netconnections
62. Network Connections - ncpa.cpl
63. Network Setup Wizard - netsetup.cpl
64. Notepad notepad
65. Object Packager - packager
66. ODBC Data Source Administrator - odbccp32.cpl
67. On Screen Keyboard - osk
68. Outlook Express - msimn
69. Paint - pbrush
70. Password Properties - password.cpl
71. Performance Monitor - perfmon.msc
72. Performance Monitor - perfmon
73. Phone and Modem Options - telephon.cpl
74. Phone Dialer - dialer
75. Pinball Game - pinball
76. Power Configuration - powercfg.cpl
77. Printers and Faxes - control printers
78. Printers Folder - printers
79. Regional Settings - intl.cpl
80. Registry Editor - regedit
81. Registry Editor - regedit32
82. Remote Access Phonebook - rasphone
83. Remote Desktop - mstsc
84. Removable Storage - ntmsmgr.msc
85. Removable Storage Operator Requests - ntmsoprq.msc
86. Resultant Set of Policy (for xp professional) - rsop.msc
87. Scanners and Cameras - sticpl.cpl
88. Scheduled Tasks - control schedtasks
89. Security Center - wscui.cpl
90. Services - services.msc
91. Shared Folders - fsmgmt.msc
92. Shuts Down Windows - shutdown
93. Sounds and Audio - mmsys.cpl
94. Spider Solitare Card Game - spider
95. SQL Client Configuration - cliconfg
96. System Configuration Editor - sysedit
97. System Configuration Utility - msconfig
98. System Information - msinfo32
99. System Properties - sysdm.cpl
100. Task Manager - taskmgr
101. TCP Tester - tcptest
102. Telnet Client - telnet
103. User Account Management - nusrmgr.cpl
104. Utility Manager - utilman
105. Windows Address Book - wab
106. Windows Address Book Import Utility - wabmig
107. Windows Explorer - explorer
108. Windows Firewall - firewall.cpl
109. Windows Magnifier - magnify
110. Windows Management Infrastructure - wmimgmt.msc
111. Windows Media Player - wmplayer
112. Windows Messenger - msmsgs
113. Windows System Security Tool - syskey
114. Windows Update Launches - wupdmgr
115. Windows Version - winver
116. Windows XP Tour Wizard - tourstart
117. Wordpad - write

இதை சொடுக்கவும்





http://www.gpsspying.com/



''ஒரு நல்ல கார் வாங்கணும். வாங்கப் போகும் காரால் நமக்கு மரியாதை கூடணும். அதே சமயம், அது நல்ல மைலேஜ் தரக்கூடிய காராகவும் இருக்கணும். விலையும் அதிகம் இருக்கக் கூடாது. குடும்பத்தோட போகும் அளவுக்கு இட வசதியாகவும் இருக்கணும். எந்த கார் நமக்குச் சரிப்பட்டு வரும்?'' - கார் வாங்குவது என முடிவெடுத்துவிட்ட பிறகு, இப்படிப் பல கேள்விகள் நம் மனசுக்குள் தோன்றுவது இயல்பு.

எந்த காரை வாங்குவது என்கிற குழப்பத்திலேயே பலருக்குச் சேர்த்துவைத்து இருக்கும்

காசில் பாதி கரைந்து விடும். வேறு சிலரோ - நண்பர்கள், உறவினர்களின் கார்களைப் பார்த்து மதி மயங்கி, தங்கள் தேவைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத காரை வாங்கி விடுவார்கள்.

பெட்ரோல் கார் தேவை உள்ளவர்கள் டீசல் கார் வாங்கி அவஸ்தைப்படுவதும், வீட்டில் நான்கு பேர் மட்டுமே உள்ளவர்கள் 8 பேர் பயணிக்கக்கூடிய எஸ்யூவி காரை வாங்கிவிட்டு பெட்ரோல், பராமரிப்புச் செலவுகளைக் கண்டு பயந்து... வாங்கிய காரை விற்றுவிடும் நிலைமைக்கும் வருவதும் எதனால்?

நமக்குச் சரியான கார் எது என்று கண்டு பிடித்து வாங்கினால்தான் காருக்கான முழுப் பயனையும் அடைய முடியும். ஆடி, பிஎம்டபிள்யூ துவங்கி டாடா நானோ வரை இந்தியாவில் இப்போது மொத்தம் 120 மாடல் கார்கள் விற்பனை ஆகின்றன. இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட இன்ஜின் வகைகளும், ஏராளமான வேரியன்ட்டுகளும் இருக்கின்றன. உங்கள் முன்னே அணிவகுத்து நிற்கும் நூற்றுக்கணக்கான கார்களில் உங்கள் தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் பொருந்தி வரக்கூடிய கார் எது?


வாங்க... கார் வாங்கப் போகலாம்!


கார் வாங்குவதற்கான தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மட்டும் போக்குவரத்துக்காக காரைப் பயன்படுத்துவது... குடும்பத்தினரோடு வார இறுதி நாட்களில் நண்பர்கள் வீட்டுக்கு அல்லது அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவதற்கு... பிசினஸ் விஷயத்துக்காக அடிக்கடி வெளியூர் சென்று வருவதற்கு... என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கின்றன. அந்தத் தேவைகளுக்கு ஏற்றபடி காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எப்போதுமே உடும்புப் பிடியாக ஒரு காரை மனதில் வைத்துக்கொண்டு இந்த காரையே வாங்கிவிடலாம் என்கிற முடிவுக்கு வராதீர்கள். உங்கள் தேவைகளைப் பொறுத்துத்தான் காரை வாங்க வேண்டும் இல்லையா? ஹேட்ச்பேக், பிரீமியம், செடான், எஸ்யூவி, எம்யூவி என சந்தையில் பல கார் வகைகள் இருப்பதால், எந்த கார் வாங்குவது என்று தீர்மானிப்பதற்கு முன்பு... எந்த வகை கார் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்.

ஹேட்ச்பேக் வகை

பொதுவாகச் சொன்னால், ஹேட்ச்பேக் என்பது செடான் கார்களுக்கு ஒரு படி சிறியது. அதேபோல, ஹேட்ச்பேக் என்றாலே ஐந்து கதவுகள் இருக்கும் என்பதும் பொது விதி. இந்த வகை கார்களில் பொதுவாக நான்கு பேர் வசதியாகப் பயணிக்கலாம். மைலேஜ், பராமரிப்பு, சர்வீஸ் செலவுகள் என அனைத்திலுமே அடக்கமான கார்கள் இவை.

விலை குறைவான கார்... விற்பனையில் வெளுத்து வாங்கும் கார் என்பதால், நம் நாட்டில் ஹேட்ச்பேக் கார்கள்தான் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. இதில், ஒரு கார் மற்றொரு காரில் இருந்து வேறுபட வேண்டும் என்பதால் ஸ்டைலிலும், சிறப்பம்சங்களிலும் புதுப் புது விஷயங்களை கார் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்துகின்றன. இதனால் இதில் சாய்ஸ் அதிகம். இந்த மிகப் பெரிய ஹேட்ச்பேக் லிஸ்ட்டில் இருந்து ஒரு காரைத் தேர்ந்தெடுப்பதுதான் பெரிய சவால். ஹேட்ச்பேக் கார்களிலேயே விலையைப் பொருத்து ஸ்மால் பட்ஜெட் (2-3 லட்சம்), மீடியம் பட்ஜெட் (3-5 லட்சம்), ஹை-பட்ஜெட் (5-7 லட்சம்) என மூன்று விதமான விலையில் கார்கள் விற்பனைக்கு இருக்கின்றன.

செடான் வகை

இது முழுமையான கார். இதை 3 பாக்ஸ் டைப் என்றும் சொல்வார்கள். அதாவது இன்ஜின், கேபின், டிக்கி என்று இதில் 3 பாக்ஸ§கள் இருக்கும். ஐந்து பேர் தாராளமாக உட்கார்ந்து பயணிப்பதற்கு இந்த செடான் கார்கள் சரியாக இருக்கும். மனைவி, மகன், மகள்... என வீட்டில் உள்ள அனைவருமே விழாக்கள், கல்லூரி, அலுவலகம் என சொகுசாகவும், வசதியாகவும் சென்று வர இந்த கார்கள் சரியாக இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்களுக்கும் பிளான் போடலாம்! விலை ஏழு லட்சத்தில் இருந்து ஆரம்பமாகும்.

சொகுசு கார் வகை


நீங்கள் யார் என்பதை சமூகத்துக்கு எடுத்துக் காட்டி, இமேஜைக் கூட்டும் கார்கள் இவை. இந்த வகை கார்கள் ஸ்டைலிலும், வசதிகளிலும் பிரமிப்பை ஏற்படுத்துவது போலவே, விலையும் பிரமிப்பை வரவழைக்கும். உதிரி பாகங்கள், பராமரிப்பு போன்ற செலவுகளிலும் இது பர்ஸைப் பழுக்கவைக்கும். விலை ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்பவர்கள், சொகுசு கார்களின் லிஸ்ட்டை கையில் எடுத்துக் கொள்ளலாம்!


எம்யூவி கார் வகை

உங்கள் வீட்டில் ஐந்து பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கான கார் எம்யூவிதான். எம்யூவி கார்கள் என்றாலே ஸ்டைலில் சுமாராகத்தான் இருக்கும். அதனால், இதில் ஸ்டைலை எதிர்பார்க்க முடியாது. இவை முழுக்க முழுக்க பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும் கார்கள். பெரிய குடும்பங்களுக்கும், அடிக்கடி வெளியூர் டூர் செல்வதற்கும் இந்த கார்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வேகம், மைலேஜ் ஆகியவையும் கிட்டத்தட்ட எஸ்யூவி கார்களின் அளவுக்கு இருக்கும்.

எஸ்யூவி கார் வகை


சாலையில் மிரட்டலாக வலம் வர வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு எஸ்யூவி கார்கள்தான் ஒரே சாய்ஸ். எந்த மாதிரி சாலையாக இருந்தாலும் சரி, காரில் ஏறிப் பறக்க வேண்டும் என்பவர்களுக்கு எஸ்யூவி கார்களில் இருக்கும் 4 வீல் டிரைவ் வசதி மிகவும் உதவியாக இருக்கும். மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு 4 வீல் டிரைவ் சிஸ்டம் நல்ல சாய்ஸ். எஸ்யூவி கார்களின் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும். ஆனால், மைலேஜ் குறைவாகத்தான் இருக்கும். எஸ்யூவி கார்களில் 5 பேர் முதல் 9 பேர் வரை பயணிக்கக்கூடிய அளவுக்கு இடவசதி உண்டு. மிகவும் உயரமானவர்கள், உடல் பருமனானவர்கள் என கிட்டத்தட்ட அனைவருக்குமே எஸ்யூவி கார்கள் சரியாக இருக்கும்.

கார் வாங்குபவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் கடன் வாங்கித்தான் கார் வாங்குகிறார்கள். அதனால், கார் கடனைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

கார் வாங்குவதற்கான முழுத் தொகையையும் கடனாகத் தரமாட்டார்கள். காரின் வகையைப் (ஹேட்ச்பேக், செடான்...) பொருத்து காரின் விலையில் 15-30 சதவிகிதத் தொகையை முன் பணமாகச் செலுத்த வேண்டியது இருக்கும். அதாவது, ஒருவர் மூன்றரை லட்ச ரூபாய் விலை கொண்ட சான்ட்ரோ காரை வாங்குகிறார் என்றால், அவர் கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாயை முன் பணமாகச் செலுத்த வேண்டும். மீதித் தொகைக்குத்தான் கடன் கொடுப்பார்கள்.

பொதுவாக, முன் பணத்தை (Down Payment) எவ்வளவு அதிகமாகச் செலுத்த முடியுமோ, அவ்வளவு அதிகமாகச் செலுத்திவிடுவது நல்லது.

கார் கடனுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்துவிட்டால், அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் கார் கடன் கிடைத்துவிடும். வாங்கும் கடனை 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு மூலம் கார் லோன் வாங்குவதைத் தவிர்க்கவும். காரணம், இதில் வட்டி கூடுதலாக இருக்கும். மேலும், கடன் திருப்பிச் செலுத்தும் ஆண்டுகளையும் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைத்துக் கொள்வது நல்லது.

'ஜீரோ சதவிகித வட்டி' என விற்பனையில் மந்தமாக இருக்கும் கார்களுக்கு விளம்பரம் செய்வார்கள். இதில் உண்மையில்லை. இந்த கார்களுக்கு அதிகமான தொகையை முன் பணமாகச் செலுத்த வேண்டியது இருக்கும். மேலும், கடன் தொகையையும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தச் சொல்வார்கள்.

எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதை தீர விசாரியுங்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் சர்வீஸ் வேகமாக இருக்காது. ஆனால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும். தனியார் வங்கிகளில் உடனடியாக கடனுக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆனால், சில இடங்களில் அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்படும் நிலையும் இருக்கிறது. கடன் வாங்கும்போதே மறைமுகக் கட்டணங்கள் (Hidden Charges) எதுவும் இருக்கிறதா என்பதை நன்கு விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பழைய காருக்கும் கடன் தரப்படுகிறது. ஆனால், இதற்கான வட்டி விகிதம் புதிய கார்களைவிட 2 முதல் 4 சதவிகிதம் வரை அதிமாக இருக்கும். அதேபோல, மிகப் பழைய கார்களாக இருந்தால் அதற்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது. அதாவது, பொதுவாக ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்களாக இருந்தால் கடன் கிடைக்காது.

'சிறிய கார்கள்' என்பவை பட்ஜெட் கார்கள். 'பெரிய கார்கள்' என்பவை பாதுகாப்பான கார்கள். பெரிய கார்களில் செல்லும்போது ஏதாவது விபத்து ஏற்பட்டால், பாதிப்புகள் மிகக் குறைவாக இருக்கும்.

சிறிய கார்கள் என்றால், காருக்குள் இடவசதி குறைவாகத்தான் இருக்கும் என்று அர்த்தமில்லை. இப்போது புதிதாக வெளிவந்திருக்கும் ஹேட்ச்பேக் கார்களே பெரிய கார்களுக்கு இணையாக அதிக இடவசதியுடன் இருக்கின்றன.

என்னென்ன வசதிகள் வேண்டும்?

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் அதிகம் பயணிப்பவர்கள் மற்றும் ஆஃப் ரோடு ஆர்வலர்களைத் தவிர... 4 வீல் டிரைவ் சிஸ்டம் பலருக்குத் தேவைப்படாது. அதேபோல் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வேண்டுமா அல்லது மேனுவல் கியர் பாக்ஸ் வேண்டுமா என்பதையும் உங்கள் தேவையை வைத்து முடிவு செய்யுங்கள்.

எவ்வளவு பவர் வேண்டும்?

0-60, 0-100 போன்ற பர்ஃபாமென்ஸ் பட்டியலைப் பார்த்து அதிகமாக மயங்கத் தேவையில்லை. வேகமாகப் பறக்கக்கூடிய கார்களை வாங்கிவிட்டு, அதன் ஆக்ஸிலரேட்டரை முழுதும் மிதிக்கவே பயப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பறந்துகொண்டே இருப்பவர்கள்... கார் நிரம்பி வழியும் அளவுக்குப் பயணிகளோடு பயணப்படுகிறவர்கள் ஆகியவர்களைத் தவிர, சக்தி மிகுந்த இன்ஜின் கொண்ட கார்கள் பலருக்குத் தேவைப்படாது.

டீசல் கார் வாங்கலாமா? பெட்ரோல் கார் வாங்கலாமா?

வாரத்துக்கு 500 கி.மீ-க்கு மேல் பயணிப்பவர்களுக்கு டீசல் இன்ஜின் பொருத்தமானதாக இருக்கும். சிஆர்டிஐ, பம்ப் ட்யூஸ், டர்போ சார்ஜர்... என பல வகையான தொழில்நுட்பம் கொண்ட டீசல் இன்ஜின்கள் உள்ளன. பம்ப் டியூஸ் தொழில்நுட்பம் பிரீமியம் வகை கார்களில் மட்டுமே உள்ளது. பொதுவாக, சிஆர்டிஐ தொழில்நுட்பம் கொண்ட கார்களை வாங்குவதே நல்லது.

ஆனால், டீசல் கார்கள் பெட்ரோல் கார்களைவிட விலை சற்றே அதிகமாக இருக்கும். அதேபோல், பராமரிப்புச் செலவுகளும் கொஞ்சம் அதிகம்தான்.

பழைய காரா... புதிய காரா?

காரும், செல்போனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். வாங்கிய ஒரு ஆண்டுக்குள் அதன் மதிப்பு கணிசமாகக் குறைந்துவிடும். பழைய காரைப் பொறுத்தவரை மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உள்ள கார்களை மட்டுமே வாங்குவது நல்லது. உதாரணமாக மாருதி ஸ்விஃப்ட், ஹோண்டா சிட்டி, ஹுண்டாய் சான்ட்ரோ ஆகிய கார்களை பழைய கார் மார்க்கெட்டில் வாங்கினாலும் அதன் மதிப்பு உடனே குறைந்துவிடாது. மேலும் இவற்றின் மைலேஜ், பராமரிப்பு, பர்ஃபாமென்ஸ் ஆகியவையும் சிறப்பாக இருக்கும். எவ்வளவு கி.மீ கார் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதையும் பார்த்து வாங்க வேண்டும்.

3 ஆண்டுகளுக்குள் ஓடிய காரை வாங்குவதே சிறந்தது. இல்லாவிட்டால் புதிய காரை வாங்கிவிடுவதே நல்லது. விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக பழைய காரை வாங்கினால், அதன் பராமரிப்புச் செலவுகள் புதிய கார் வாங்குவதைவிட அதிகமாக இருக்கும்.

புதிய கார் வாங்கும்போது இலவச இன்ஷூரன்ஸ், குறைந்த வட்டியில் கடனுதவி என பல சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பட்ஜெட் எவ்வளவு?

நீங்கள் எவ்வளவு பட்ஜெட் வைத்திருக்கிறீர்களோ அதற்கு ஏற்றபடி எந்த காரை வாங்குவது என்று திட்டமிடுங்கள். கார் வாங்கும்போது இருக்கும் விலையை மட்டும் பார்க்காமல் சர்வீஸ் செலவுகள், மாதந்தோறும் பெட்ரோலுக்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டியது இருக்கும், ஆண்டுக்கு ஒருமுறை இன்ஷூரன்ஸ் எவ்வளவு என்பது போன்ற செலவுகளையும் கணக்கில் கொள்ளுங்கள்.

எங்கே வாங்குவது?

காரை முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அடுத்து எங்கே வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதிக டிஸ்கவுண்ட் கொடுக்கும் டீலர்களை மட்டுமே நம்பிப் போகாதீர்கள். கஸ்டமர் சர்வீஸ், கார் உடனடியாக டெலிவரி தருவது என அனைத்து சேவைகளையும் தரமாக வழங்குபவர்களிடம் காரை வாங்குவதே நல்லது.

டீலர் சொல்வது:

''காரை உடனே புக் பண்ணுங்க சார். இன்றுடன் இந்த ஆஃபர் முடிவடைகிறது!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''பரவாயில்லை. நாளைக்கு வருகிறேன்!''

இப்போது கார்களின் விற்பனை மந்தமாக இருப்பதால், ஷோரூமுக்குள் நுழைகிற எவரும் கார் வாங்காமல் திரும்பிப் போய்விடக் கூடாது என்பதில் டீலர்கள் கவனமாக இருக்கிறார்கள். இதனால், கார் பற்றி நீங்கள் சும்மா விசாரிக்கச் சென்றால்கூட எப்படியாவது உங்களை கார் வாங்க வைத்துவிட முடியுமா என்பதில்தான் கவனமாக இருப்பார்கள். ஷோரூமுக்குள் சென்றவுடன் காரைப் பற்றி விசாரியுங்கள். என்னென்ன ஆஃபர்களை அவர்கள் சொல்கிறார்கள்... என்னென்ன உதிரி பாகங்கள் ஆஃபருடன் தரப்படுகின்றன என்பதையெல்லாம் விசாரித்துவிட்டு, 'நாளைக்கு வருகிறேன்!' என்று சொல்லிவிட்டு வந்து விடுங்கள்.

சேல்ஸ்மேன் சொல்வது: ''என் மேனேஜரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''என் மனைவியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்!''

சேல்ஸ்மேன் சொல்வதைவிட நீங்கள் அதிக ஆஃபர் கேட்டாலோ, அல்லது அக்ஸஸரீஸ் இலவசமாக வேண்டும் என்று எதைக் கேட்டாலும் சேல்ஸ்மேன்கள், ''சார், மேனேஜர்கிட்டப் பேசிட்டுச் சொல்றேன்'' என்பதையே பதிலாகச் சொல்வார்கள். மேனேஜரை கறாரான ஆசாமி போலவும், உங்களிடம் பழகும் சேல்ஸ்மேன் உங்களுக்காகப் பரிந்து பேசுகிறவர் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டு இருக்கும் விற்பனைத் தந்திரம். மேனேஜரிடம் பேசிவிட்டு மீண்டும் சேல்ஸ்மேன் சொல்லும் டிஸ்கவுண்டைக் கேட்டு அசந்துவிடாதீர்கள். அவர்கள் சொல்லும் டிஸ்கவுண்ட் சரியானதுதானா என்பதை மற்ற டீலர்களிடம் விசாரித்துவிட்டு முடிவெடுங்கள். அவர்களது டெக்னிக்கையே நீங்களும் பயன்படுத்துங்கள். வீட்டில் மனைவியைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன். அம்மா - அப்பாவைக் கேட்டுவிட்டு பிறகு சொல்கிறேன் என்பதையே பதிலாகச் சொல்லுங்கள்.

சேல்ஸ்மேன் சொல்வது: ''சார் உங்களுக்காகத்தான் இவ்வளவு டிஸ்கவுண்ட்!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''மற்ற டீலர்கள் இதைவிட அதிக டிஸ்கவுண்ட் தருகிறார்கள்!''

சேல்ஸ்மேன், ''உங்களுக்காகத்தான் இவ்வளவு டிஸ்கவுண்ட் கொடுக்கிறோம் சார்!'' என்று சொல்வார்கள். அதை நம்பிவிடாதீர்கள். மற்ற டீலர்கள் எவ்வளவு டிஸ்கவுண்ட் தருகிறார்கள், அவர்கள் கொடுக்கும் உதிரி பாகங்கள் என்னென்ன என்பது உள்பட அத்தனை விவரங்களும் உங்களுக்குத் தெரியும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

சேல்ஸ்மேன் சொல்வது: ''இதில் எங்களுக்கு லாபமே இல்லை!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''நான்தான் பணம் கொடுக்கிறேன். நீங்கள் அல்ல!''

நீங்கள் சொல்லும் 'டீலில்' லாபமே இல்லை என்ற தோற்றத்தை சேல்ஸ்மேன் ஏற்படுத்துவார். லாபம் இல்லாமல் எந்த டீலருமே வியாபாரம் செய்யமாட்டார்கள். மேலும், கார் வாங்க பணம் கொடுப்பவர்கள் நீங்கள்தான். 3 லட்ச ரூபாய் காரில் மூவாயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட் கொடுப்பதால் டீலர்கள் நஷ்டமடைந்து விடமாட்டார்கள்.

சேல்ஸ்மேன் சொல்வது: ''காருக்கு செம டிமாண்ட். புக்கிங் அதிகமாக இருக்கிறது!''

நீங்கள் சொல்ல வேண்டியது: ''அந்த டீலர் உடனே டெலிவரி தருவதாகச் சொல்லியிருக்கிறார்!''

உடனே நீங்கள் காரை புக் செய்துவிட வேண்டும் என்பதற்காக அதிக டிமாண்ட் இருப்பதுபோலவும், ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்குவதற்காக வரிசையில் நிற்பதுபோலவும் படம் காட்டுவார் சேல்ஸ்மேன். கவனமாக இருங்கள்... நீங்கள் வாங்கப்போகும் காருக்கு மார்க்கெட்டில் என்ன டிமாண்ட் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வெவ்வேறு டீலர்களிடம் விசாரித்து முடிவெடுங்கள்.

எந்த காரை வாங்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்த உடன், அந்த காரை அவசியம் டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்.!

வசதியாக உட்கார முடிகிறதா?

காரில் வசதியாக உட்கார முடிகிறதா, இருக்கை மற்றும் ஸ்டீயரிங் நம் வசதிக்கேற்ப இருக்கிறதா, பெடல்கள் சரியான இடத்தில் இருக்கிறதா, தலை மேற்கூரையில் இடிக்காத வகையில் ஹெட்ரூம் இருக்கிறதா, கால்களை நீட்டி மடக்கி உட்கார முடிகிறதா என்று பாருங்கள்.

எல்லா சாலைகளிலும் ஓட்ட முடிகிறதா?

அகலமான, குறுகலான, குண்டும் குழியுமான, நெரிசலான என அனைத்து வகையான சாலைகளிலும் காரை ஓட்டிப் பாருங்கள். காரை ஓட்டும்போது உங்கள் கவனத்தை கார் ஓட்டுவதில் மட்டும் செலுத்துங்கள். சேல்ஸ்மேன்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம். அவர்கள் காரில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கலாம்.

கியர்களை சுலபமாக மாற்ற முடிகிறதா?

சடன் பிரேக் அடித்துப் பாருங்கள். ஏபிஎஸ் பிரேக்ஸ் இருந்தால், அது சரியாக வேலை செய்கிறதா என்று பாருங்கள். எல்லா கியரிலும் வேகமாக ஆக்ஸிலரேஷன் கொடுத்துப் பாருங்கள். கியர்களைச் சுலபமாக மாற்ற முடிகிறதா என்றும் பாருங்கள்.

மியூஸிக் சிஸ்டம் வேலை செய்கிறதா?

பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங், மியூஸிக் சிஸ்டம், ஏ.ஸி ஆகிய அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் சோதியுங்கள். மேலும், இப்போது வருகின்ற கார்களில் ஸ்டீயரிங் வீலிலேயே மியூஸிக் கன்ட்ரோல் கொடுக்கப்படுகின்றன. இது ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். கைவசம் 'பென் டிரைவ்' இருந்தால் யுஎஸ்பி போர்ட் வேலை செய்கிறதா என்றும் பாருங்கள்.

குடும்பத்தோடு டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள்!

டெஸ்ட் டிரைவ் செய்யும்போதே குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களையும் அப்போதே தெரிந்துகொள்ளலாம்.

டிக்கியில் இடம் இருக்கிறதா?

காபி கப், தண்ணீர் பாட்டில், பேப்பர் போன்ற பொருட்கள் வைக்க காருக்குள்ளே இடம் இருக்கிறதா என்று பாருங்கள். டிக்கியிலும் போதுமான இடம் இருக்கிறதா என்றும் பாருங்கள்.

டிஸ்கவுண்ட் எவ்வளவு?

கார் உங்களுக்கு முழுவதும் பிடித்துவிட்டதென்றால் டிஸ்கவுண்ட், என்னென்ன உதிரி பாகங்கள் வேண்டும் என அனைத்தையும் டீலரிடம் சொல்லி இறுதியாக டீலை முடியுங்கள்.

பகலில் காரை டெலிவரி எடுப்பதே நல்லது. இருட்டான சமயத்தில் காரை டெலிவரி எடுக்கும்போது, காரில் ஏதாவது அடிபட்டிருந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

காரைச் சுற்றிலும் பாடி பேனல்களையும், கண்ணாடிகளையும் சோதனை செய்யுங்கள். காரின் கார்னர்களைக் கவனமாகப் பாருங்கள்.

காரை டெலிவரி எடுக்கும் முன் அதில் ஏதாவது ரிப்பேர் செய்யப்பட்டு இருக்கிறதா என்று கேளுங்கள். ஏனென்றால், புது கார் என்றாலும் ஃபேக்டரியில் இருந்தோ அல்லது டீலரின் 'யார்ட்'டில் இருந்தோ காரைக் கொண்டு வரும்போது காரில் ஏதாவது அடிபட்டு சரிசெய்யப்பட்டு இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், ரிஜிஸ்ட்ரேஷன் கொண்டு போகும்போதும் இதுபோல் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏதாவது அடிபட்டு சரி செய்யப்பட்டு இருந்தால், அதை டெலிவரி நோட்டில் எழுதி விற்பனை மேலாளரிடம் காரில் எங்கு அடிபட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு, அதை டீலரிடம் கொடுத்து சரி செய்துவிடுங்கள்.

காரின் உள்ளே டேஷ் போர்டும், ஃபேப்ரிக்ஸ§ம் ஒன்றாக இயைந்து இருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால், சில நேரங்களில் காரின் டேஷ் போர்டும், ஃபேப்ரிக்ஸ§ம் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். அப்படி இருந்தால் அது தயாரிப்பாளரின் குறைபாடு. அதைச் சரி செய்து கொடுக்கச் சொல்லிவிடுங்கள்.

காரில் நீங்கள் கூடுதலாகக் கேட்ட 'அக்ஸஸரிஸ்' அனைத்தும் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் டெலிவரி எடுக்கும்போது 'ஃபுல் டேங்க்' பெட்ரோல் கேட்டிருந்தால், அது நிரப்பப்பட்டு இருக்கிறதா என்றும் பாருங்கள்.

காரில் PDI (Pre Delivery Inspection) ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சர்வீஸ் புக்கிலும் இதே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறதா என்றும் பாருங்கள்.

செக் லிஸ்டில் உள்ளபடி அனைத்து ஆவணங்களையும், பொருட்களையும் பெற்றுக் கொண்ட பிறகே ஒப்புதல் கையெழுத்தை இடுங்கள்.

காரை டெலிவரி எடுக்கும் முன்பு சேல்ஸ்மேனிடம் பூட்டைத் திறப்பது எப்படி, ஏ.ஸி சுவிட்ச், அலார்ம் சிக்னல்கள் என காருக்குள் இருக்கும் விஷயங்களை ஒரு முறைக்கு இரண்டு முறை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

கடைசியாக காரை டெலிவரி எடுக்கும் முன் இன்ஷூரன்ஸ் பேப்பர்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இன்ஷூரன்ஸ் பேப்பரில் இன்ஜின் எண் மற்றும் சேஸி எண் சரியாகக் குறிக்கப்பட்டு இருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால், முதல் முறை இன்ஷூரன்ஸ் செய்யும்போது காரின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் இருக்காது என்பதால், இவை அனைத்தும் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது அவசியம்!

கார் வாங்கிவிட்டோம், ஆறு மாதம் கழித்துத்தான் சர்வீஸ் என்பதற்காக அமைதியாக இருந்துவிடக் கூடாது. காரைப் பொறுத்தவரை தொடர்ந்து அதைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கார் வாங்கிய உடனே பவர் ஸ்டீயரிங், மியூஸிக் சிஸ்டம் அல்லது பவர் விண்டோஸ் என ஏதாவது ஒன்று வேலை செய்யவில்லை என்றாலும், சர்வீஸ் செய்யும்போது பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியம் காட்டாதீர்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் வாரன்டி இருக்கும்போது தனியார் மெக்கானிக்குகளிடம் சர்வீஸ் செய்யாதீர்கள். இப்படிச் செய்தால், காரில் பிரச்னை என்று வரும்போது வாரன்டி செல்லுபடி ஆகாது என டீலர்கள் ஈஸியாக நழுவி விடுவார்கள்.

கார் தயாரிப்பாளர் பட்டியலிட்டுள்ளதுபோல சீரான இடைவெளிகளில் காரை சர்வீஸ் செய்யுங்கள்.

ஹெட் லைட், டெயில் லைட் என அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கிறதா என்றும் பாருங்கள்.

டயரில் உள்ள காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது நிச்சயம் சரி பாருங்கள். ஸ்பேர் டயரிலும் காற்றைச் சரியாக அடைத்து வைத்திருப்பது அவசியம்.

விண்ட் ஸ்கிரீன் வாஷர், கூலன்ட், ஆயில், பிரேக் ஃப்ளூயிட் என அனைத்துமே சரியான அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்!

நன்றி மோட்டார் விகடன் ....





நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய காரை, சில நாட்கள் கழித்துத் திறந்து பார்க்கும்போது, அதில் அழுகிய நிலையில் நிர்வாணமாக ஓர் பிணம் கிடந்தால் எப்படி இருக்கும்?

சித்தபிரமை பிடித்தவர் போல இருக்கிறார், பெண்ணாடத்தைச் சேர்ந்த சேது முத்துக்குமாரசாமி. அவர் மட்டுமல்ல... ஊரே மீள முடியாத திகிலில் ஆழ்ந்து கிடக்கிறது.

நடந்தது என்ன..? இதோ அவரே விளக்கு-கிறார்... ''நான் எப்போதாவது ஒரு முறைதான் காரைப் பயன்படுத்துவேன். மற்ற நேரங்களில் என் வீட்டுக்கு அருகே உள்ள கோயில் முன்பு காரை நிறுத்திவைப்பேன். கடந்த மே 27-ம் தேதி காரில் வெளியே போய் வந்த நான், எப்போதும் போல காரை கோயிலுக்கு அருகே நிறுத்தி, ரிமோட் மூலம் லாக் செய்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

அதன் பிறகு எனக்குப் பல நாட்கள் கார் தேவைப்படவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் இரண்டாம் தேதி வெளியே செல்வதற்காக காரை எடுக்கச் சென்-றேன். காரை நோக்கி நடக்கும்போதே, 'காருக்கு அருகே குடலைப் புரட்டும் துர்நாற்றம் எடுக்கிறது' என்று அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். எலி ஏதாவது செத்துக் கிடக்கும் என்று நினைத்தபடி காரின் கதவைத் திறந்தேன்... காருக்குள்ளே நான் கண்ட காட்சி அதிர வைத்தது. பூட்டிய காருக்குள் நிர்வாணமாக ஒரு ஆண் பிணம் கிடந்ததைப் பார்த்து செய்வதறியாது திகைத்துவிட்டேன். அந்தப் பதற்றத்துடனேயே போலீஸ§க்கு போன் செய்தேன். போலீஸார் விசாரணை செய்தார்கள்... நடந்ததைச் சொன்னேன். காரின் உள்ளே இருந்த பிணம், அடையாளம் காண முடியாத அளவுக்குப் புழு பிடித்து சிதைந்து போய்விட்டது... இது எப்படி நிகழ்ந்தது என்றே புரியவில்லை!'' என்றார் பயம் அகலாமல்.

நாம் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணனிடம் இது பற்றிக் கேட்டோம். ''காரை நிறுத்தி விட்டுச் செல்லும்போது ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்திருக்கிறார். லாக் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர் அன்-லாக் பட்டனையேகூட அழுத்தி இருக்கக்கூடும். ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும், அன் - லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும் மெல்லிய வித்தியாசம் உண்டு. என்றாலும், இதைக் கவனமாகக் கேட்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதுமட்டுமல்ல, முத்துக்குமாரசாமி கார் போன்று செக்யூரிட்டி சிஸ்டம் பொருத்தப்பட்ட கார்களை கள்ளச் சாவி போட்டுத் திறந்தால்கூட ஒரிஜினல் சாவி இல்லாமல் அதை ஐம்பது மீட்டருக்கு மேல் ஓட்டிக்கொண்டு போக முடியாது. இந்தக் காரணத்தினாலேயேகூட காரின் உரிமையாளரான முத்துக்குமாரசாமி அலட்சியமாக இருந்திருக்கலாம்.

இறந்து கிடந்தவரின் உடலைப் பரிசோதனை செய்ததில், வயிற்றில் கலப்படமான உணவு சாப்பிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. சம்பவத்தன்று, காரைத் திறந்து உள்ளே போயிருப்பார், உள்ளே சென்று கதவை மூடியதும் அது லாக் ஆகி இருக்கும். உள்ளே இருந்து கார் கதவைத் திறப்பது எப்படி என்று தெரியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் போராடி இறந்துள்ளார்'' என்றார் கண்ணன்.

மனிதக் கைகளில் ஆறாவது விரலாக நீண்டுவிட்டது ரிமோட். எலெக்ட்ரானிக் உபகரணங்களில் தவறே நிகழாது என கூற முடியாது. காரை ரிமோட் மூலம் லாக் செய்தவர், அனைத்துக் கதவுகளும் ஒழுங்காகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று காரின் கதவை இழுத்து ஒருமுறை சோதித்துப் பார்த்திருந்தால், ஒரு உயிர் பலியை தவிர்த்திருக்கக் கூடும்!




''ஜீரணிக்கக் கடினமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் தமிழ் ஈழப் போராட்டக் களத்தில்அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க முடியும்!'' என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள், இலங் கைக்கு

வெளியே உள்ள புலி இயக்கப் பிரதிநிதிகள். பிரபாகரன் உயிரோடு இல்லை என்பது குறித்து மெள்ள மெள்ள இவர்கள் விவாதிக்கத் தொடங் கியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசு பத்மநாபன், 'தேசியத் தலைவர் காட்டிச் சென்ற வழியில் அரசியல் ரீதியில் போராட்டத்தைத் தொடருவோம்' என சொல்லிவருகிறார். இதற்கிடையில், ''இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்றால், சிங்கள அரசின் மூலம்தான் செய்ய வேண்டும். சரிநிகர் சமமான அந்தஸ்தோடு தமிழர்கள் வாழ்வதற்கான மாற்று வழிமுறைகளைத்தான் விரைவுபடுத்த வேண்டும்!'' என்று தமிழக முதல்வர் கூறியிருப்பது... புலிப் பிரதிநிதிகள் மத்தியில் கடுமையான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

''தலைவர் பிரபாகரன் காட்டிய பாதையில் தமிழ் ஈழம் அடைந்தே தீருவோம்!'' என்று தங்களுக்குள் உறுதியோடு முழங்கிக் கொள்ளும் இவர்கள், தனது கடைசித் தருணத்தில் பிரபாகரன் வெளியிட்ட லட்சியம் குறித்தும் விறுவிறுவென விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வழியிலிருந்து நமக்கும் கசிந்து வந்தன பிரமிப்பூட்டும் அந்த 'கடைசித் தருணÕ தகவல்கள்.


கலங்க வைத்த கடைசி உரை!

நவம்பர் 27 மாவீரர் தினம் மற்றும் தான் மிகவும் நேசித்த போராளிகளின் நினைவு தினம் போன்ற நாட்களில் மாவீரர்கள் துயிலும் இடங்களில் மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் பிரபாகரன். இப்படி வருடத்துக்கு ஓரிரு முறைதான் இலங்கைத் தமிழ் மக்கள் பிரபாகரனை நேரில் பார்க்க முடியுமென்றாலும், தன் தளபதிகளை எப்போதும் மக்களோடு மக்களாக அவர் இருக்கச் செய்திருந்தார். தான் சொல்ல விரும்பும் கருத்துகளை, செய்திகளை அந்தத் தளபதிகள் மூலமாக மக்களிடம் உடனுக்குடன் அவர் சேர்த்து வந்தார்.

ஆனால், 2007-ல் நான்காம் கட்ட ஈழப் போர் தொடங்கியபோது... கிளிநொச்சி, பரந்தன், ஆனை யிறவு என வரிசையாக வீழ்ச்சி ஏற்பட... புலிகளின் தளபதிகளைக்கூட மக்களால் சரிவர சந்திக்க முடியாத நிலை உண்டானது. இருந்தாலும், பிரபாகரன் தங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக் கையில்தான் மொத்த மக்களும் புலிகள் பின்னால் தொடர்ந்து அணிவகுத்திருந்தனர்.

2009 மார்ச்சில் மிகவும் உக்கிரமாக இறுதிக் கட்டப் போர் தொடங்கியபோது, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டும் இரண்டரை லட்சம் மக்கள் இருந்தனர். இடைவிடாத போரி னால், நம்பிக்கை இழந்திருந்த அந்த மக்களை இக்கட் டான அந்தத் தருணத்திலும் - நீண்ட இடைவெளிக்குப் பின் - சந்தித்திருக்கிறார் பிரபாகரன். இலங்கை மண்ணிலிருந்து வெளியேறி வேற்று நாட்டில் அடைக்கலம் புகுந்துவிட்ட தமிழ்ச் சகோதரர் ஒருவர் அதுகுறித்து உணர்ச்சிவசப்பட்டு நம்மிடம் பகிர்ந்துகொண்டார் -

''கடந்த ஏப்ரல் மாசக் கடைசியில முள்ளிவாய்க்காலை ஒட்டியிருந்த ஒரு மருத்துவமனைப் பக்கம் தேசியத் தலைவர் (பிரபாகரன்) எங்களைச் சந்திக்கப் போறதா ராத்திரியில வந்து புலிகள் சொன்னாங்க. விடியுற நேரத்துல தேசியத் தலைவர் தன் மகன் சார்லஸ் ஆன்டனியோட வந்து சந்திச் சார். 'இப்படியரு இக்கட்டான நிலையில் மக்களைத் தவிக்கவிட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'னு எடுத்த எடுப்பிலேயே கலங்கினார். 'இந்தப் போர் இப்போதைக்கு நமக்கு எதிராக முடிவுற்றாலும், அடுத்த 20 வருடங்களுக்கு இயக்கம் செல்ல வேண்டிய பாதை தெளிவாகவே இருக்கு. அதனால், இப்போதிருப்பதைவிடப் பல மடங்கு வேகத்தோடு போராடப் போகிறோம். நீங்கள் என்னுடன் இருந்தால், இதைவிடப் பெரிய போராட் டங்களை என்னால் நடத்த இயலும்'னு தலைவர் பேசினார்.

போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருந்ததால், அப்ப எங்க மக்களுக்கு சாப்பாடுகூடக் கிடைக்காமலிருந்தது. அதைத் தலைவர் கிட்ட சொன்னதும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசியும், அரை கிலோ மீனும் தரும்படி தன் தளபதிகளுக்கு உத்தரவு போட்டார். இறுதியா கிளம்பறப்போ எங்க மக்கள்ல சிலர், 'சூழலை மனசில் வச்சு தலைவர் வெளியில போயிடணும். போரை வேறு வாய்ப்பான தருணத்தில் தொடரலாம்'னு சொன்னாங்க. தலைவர் அதை ஏற்கலை. 'இறுதிப் போரில் எனக்கு வீரச்சாவு வந்தாலும் அது என் மண்ணில், என் மக்களுடன்தான்'னு உறுதியா சொல் லிட்டுக் கிளம்பிட்டார். எங்களுக்குக் கண்ணீர் வந்துருச்சு. இப்போது தலைவரைப் பற்றி மாறுபட்ட செய்திகள் வந்துகொண்டிருந்தாலும்... அவருடைய அந்த இறுதி உரை இப்போ நினைத்தாலும் எங்களைக் கலங்கடிக்கிறது...'' என்றார் குரல் விம்ம.

சரணடைந்த புலிகள்... சாதுரியக் கட்டளை!

இறுதிப் போர் முடிவுற்றதாக இலங்கை ராணு வம் அறிவித்த, மே 18-ம் தேதி ராணுவத்திடம் கிட்டத்தட்ட 13 ஆயிரம் புலிகள் சரணடைந்தனர். 'முடிந்த வரை போராடி, முடிவில் வீரச்சாவைத்தழுவு' என்பதுதான் புலிகளுடைய கொள்கை. அப்படியிருக்கும் நிலை யில் போராளிகள் சரணடைந்த விவ காரம், உலகம் முழுவதிலுமுள்ள புலி ஆதரவாளர்கள் மத்தியில் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் பார்க்கப் பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து சில விஷயங்களை விவரிக்கிறார்கள், ஐரோப்பாவிலுள்ள புலி ஆதரவாளர்கள்.

''போராளிகளில் நாங்கள் முக்கியமாகக் கருதிய சிலர்கூட சரணடைந்தார்கள் என்ற செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, வவுனியா மற்றும் மன்னாரில் உள்ள வதை முகாம்களில் இருக்கும் அவர்களுடன் சிலர் பேசிய பிறகு, தற்போது சரணடைந்த பின்னணியைத் தெரிந்து தகவல் அனுப்பியுள்ளார்கள். அதாவது, மே முதல் வாரத்தில் இந்தியத் தேர்தலுக்காக, போர் உக்கிரம் சற்றே தணிந்திருந்த நிலையில் முக்கியமான தளபதிகளுடன் தலைவர் ஆலோ சனை நடத்தியிருக்கிறார். அப்போது, 'இறுதிக்கட்டத்தில் நம்மில் இருக்கும் 15 ஆயிரம் பேரும் கரும்புலிகளாக மாறி, ராணுவத்துக்குப் பேரழிவை ஏற்படுத்துவோம். நம்மிடம் இருக்கும் 300 டன் வெடி பொருட்களுக்கும் ராணுவத்தை இரையாக்குவோம்'னு தளபதிகள் சிலர் வீராவேசமா பேசியிருக்காங்க.

தலைவரோ வேறுவிதமாக யோசித்திருக்கிறார். தமிழ் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய மூன்று விஷயங்களை முன்வச்சு மூன்று தசாப்த காலங்களாக வெற்றிகரமான ஒரு ஆயுதப் போராட்டம் நடத்திய போதெல்லாம் கிடைக்காத மக்கள் ஆதரவு, சமீபத்திய சில அரசியல் நகர்வுகளின் மூலமாகக் கிடைக்கத் துவங்கியதை தலைவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். 'உலகம் முழுவதும் இப்போது நம் போராட் டத்துக்குக் கிடைத்திருக்கும் ஒட்டு மொத்த கவனம் இதற்குமுன் எப்போதும் கிடைத்ததில்லை. அதற்குக் காரணம், நாம் மட்டுமே போராடிக் கொண்டிருந்த நிலைமை மாறி... தமிழகம் உள்பட உலகின் பல பகுதிகளிலும் அரசியல்ரீதியாக நமக்காக பலரும் கடுமையாக வாதிடத் தொடங்கியிருப்பதுதான். இந்த எழுச்சியை அணையாமல் முன்னெடுத்துச் செல்ல, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்' என்று தலைவர் சொல்லி யிருக்கிறார். அதனால்தான் இறுதிப் போர் உக்கிரமாக நடந்த தருணத் திலும், அரசியல் பிரிவைச் சேர்ந்த போராளிகளை அவர் களத்தில் இறக்க முன்வரவில்லை. ராணுவரீதியாக இயக்கம் வீழ்ச்சியுற்ற பிறகும் அரசியல்ரீதியாக இயக்கம் தொடர்ந்து செயல் பட்டால்தான்... பிறிதொரு தருணத்தில் மறுபடியும் ஆயுதப் போரைத் தொடர முடியும் என்று அவர் நினைத்திருக்கிறார். அதனாலேயே, அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் வேறு வழியில்லாத சூழ்நிலையில், சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தாலும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் போட்ட கணக்குக்கு மாறாக... அவர்களில் பலரை சிங்கள ராணுவம் வெறித்தனமாக சுட்டுக் கொன் றிருக்கிறது!'' என்று கூறுகிறார்கள் இந்தப் புலி ஆதர வாளர்கள்.

பிரபாகரனின் இறுதி வழிகாட்டுதலின்படிதான் புலிகள் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசியல்ரீதியாக முடுக்கி விடுவதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாக, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறாராம் செல்வராசு பத்மநாபன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற முயற்சியும்கூட அதனடிப்படையில்தான் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

''மேற்கொண்டு போருக்கு வழியில்லை என்றாகி விட்டால், ஐக்கிய இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் அரசியல் நடவடிக்கைகள் மூலம் ஒரு தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்பதும், தனக்கு நம்பிக்கையானவர்களிடம் தலைவர் பிரபாகரன் வெளிப் படுத்திவிட்டுச் சென்றுள்ள ஒரு எண்ணம். இதை தற்போது தங்கள் பிடியில் உள்ள பொட்டு அம்மான் மூலமாக சிங்கள அரசு அறிந்திருக்கவும் கூடும். அத்தகைய அரசியல் ரீதியான பங்கேற்புக்கு எதிர்காலத்தில் வரக்கூடியவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அழிக்கும் வேலை யில் சிங்கள ராணுவம் இறங்கியிருக்கிறது. மன்னாரில் 2 மற்றும் வவுனியாவில் 3 முகாம்களில் இருக்கும் 13 ஆயிரம் பேரையும் கொஞ்சம் கொஞ்சம் பேராகப் பிரித்து நிறுத்துகிறார்கள். மூகமுடிஅணிந்த சிலரை அங்கே அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் வரிசைப்படுத்தி நிற்க வைக்கின்றனர். முகமூடிக்காரர்கள் அடையாளம் காட்டும் நபர்கள், கேம்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியில் அழைத்துச் செல்லப் படுகிறார்கள். அதன்பிறகு, அவர்களின் நிலை பற்றி தெரிவதேயில்லை!'' என்று சொல்லி அதிர வைக் கிறார்கள், இலங்கைத் தகவல்களை உடனுக்குடன் பெறக்கூடிய சில புள்ளிகள்.


பிரபாகரன் சொன்ன யூத உதாரணம்!

''இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருந்த தருணத்தில் வெளியான கருத்துக் கணிப்புகள் ஆட்சி மாற்றம் உண்டாகுமென கூறியிருந்தன. அப்படி வரும்பட்சத்தில், இந்தியாவிடமிருந்து இலங்கை ராணுவத்துக்குக் கிடைக்கும் உதவிகள் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையோடு இருந்தார் பிரபாகரன். அந்த சமயத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்த ஒருவர் மூலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஒருவர் பிரபாகரனைச் சந்தித்தார்.

அப்போது, 'இறுதிக்கட்டப் போரில் எனக்கு வீரச்சாவு ஏற்பட்டாலும் பரவாயில்லை. இந்த மண்ணைவிட்டு அகலப் போவதில்லை' என்று கம்பீரமாகச் சொன்ன பிரபாகரன், 'குறிப்பிட்ட தருணத்தில் உலகிலுள்ள தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கருத்துகளாகத் தானே பேசி பதிவு செய்து வைத்திருந்த சி.டி-யை அவரிடம் கொடுத்திருந்திருக்கிறார். 'தக்க தருணம் வரும்போது, அந்த சி.டி-க்களை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்' என்றாராம். 'உலகத் தமிழர்களே... மனம் தளர வேண்டாம்' என்ற அறைகூவலுடன் அதில் பிரபாகரன் உரை தொடங்குவதாகத் தெரிகிறது.

'''உலகப் போரின்போது யூத இனத்துக்கு நேர்ந்த சோதனைகளை வரலாறு என்றும் மறக்காது. நாடு கடந்த அகதிகளாக பல ஐரோப்பிய நாடுகளில் அடைக் கலமானது யூத இனம். சொந்த மண்ணைவிட்டு அகன்று வந்தபோது, ஆயுதப் போராட்டம் நடத்த முடியாமல் போனாலும்... யூதர்கள் தங்களுக்கென ஒரு நேரம் வருமெனக் காத்திருந்தனர். அதுவரை பொறுமையாகவும் கடுமையாகவும் உழைத்தனர். தங்களுக்கென ஒரு வங்கியைத் தொடங்கிய யூதர்கள், அந்த வங்கியில்தான் தங்கள் பணத்தைப் போட்டு வைத்தார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு, இஸ்ரேலின் பெரும்பகுதியை மீட்டனர்.

அத்தகைய வரலாற்றை நாமும் நிகழ்த்த வேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தமிழ் ஈழம் அமைவதற்கு ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் நிலை உருவாகவேண்டும்... உருவாகும்! அது ஈழத் தமிழர் களுக்கான நாடாக மட்டும் இல்லாமல்... உலகத் தமிழர்கள் அனைவருமே நேசம் கொண்டாடும் நாடாக இருக்க வேண்டும். 'புலிகளின் தாகம்... தமிழீழத் தாயகம்' என்று இதுவரை ஒலித்துவந்த நம் கோஷம், 'தமிழர்களின் தாகம்... தமிழீழத் தாயகம்' என்பதாக மாற வேண்டும்' என்று அந்த சி.டி-யில் பிரபாகரன் உரை யாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

''புலிகளுக்கான அரசியல்ரீதியான புதிய கட்டு மானத்தை உலகின் வெவ்வேறு நாடுகளில் உருவாக்கும் வேலை விரைவாக நடக்கிறது. வருகிற நவம்பர் 27 மாவீரர் தினத்துக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இதில் ஏற்படும். அதுவரை பிரபாகரனின் கடைசி உரை அடங்கிய சி.டி. பத்திரமாகப் பாதுகாக்கப்படும்..'' என்கிறார்கள் நார்வேயிலுள்ள புலி ஆதரவாளர்கள்.


நன்றி ஜுனியர் விகடன்

இவன்

My photo
முதுநிலை நிரலர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

இன்றய குறள்


Followers