இன்று மாலை என் நன்பன் பார்க் பாண்டியன பாக்கபோனேன் என்னை பார்த்தவுடன் சிரிச்சுக்ட்டே வெளிய வந்தார் என்ன விசயம் என்றேன் தனக்கு நீலபல்(Bluetooth) முலமாக ஒரு பாட்டு வந்திர்பதாகவும் இதுதான் இந்த வருட்த்தின் சிறந்த பாடல் இன்றுதான் வெளியிட்டுயிருப்பதாகவும் அருமையான பாடல் என்றும் ஒரே buidup விட்டார். சரி எனக்கு நீலபல்(Bluetooth) முலமாக அனுப்புங்கள் என்றேன். எனக்கு வந்தவுடன் அதை ஓப்பன் செய்த மறுகனமே என்னால் சிரிப்பை அடக்கமுடியல. சற்று நேரம் கழித்து பாண்டியனிடம் போதும் பா, பாவம் விஜய் விடுங்க என்றேன் இப்படி பேசிகிட்டு இருக்கும் போது சன் தொலைக்காட்சியில் “புலி உரும்முது.........” ட்ரைலர் போட்டவுடன் மிண்டும் இருவரும் ஒரே சிரிப்புத்தான்.

யாம் பெற்ற சிரிப்பு இந்த வைகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் பெற வேண்டும் (விஜய் ரசிகர்கள் தவிர).

பாடலை தரவிரக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்

http://www.fileden.com/getfile.php?file_path=http://www.fileden.com/files/2009/7/7/2501552/Puli%20Urumudhu.mp3

எந்த ஊர் என்பவனே - இருந்த ஊரை சொல்லவா.....




இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவத ஒரு ஆள் அப்படியே பார்த்துகிட்டே போனான்னா – நீங்க இருப்ப்து “சிங்கார சென்னை”.

இரண்டு பேர் சண்ட போடறாங்க, இரண்டு பேரும் கொஞ்ச நேரம் எடுத்துகிட்டு போன்ல தனது நன்பர்கள் 50 பேர்ர கூப்பிட்டு, இப்ப எல்லோரும் அடிச்சிகிடாங்கன்னா - நீங்க இருப்ப்து “திருச்சி”

இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவதா ஒரு
ஆள் வந்து பஞ்சாயத்து பன்ன வர, பஞ்சாயத்து பன்ன வந்த ஆள சண்ட போட்ட இரண்டு பேரும் சேந்து அடிச்சாங்கன்னா - நீங்க இருப்ப்து – “மதுரை”

இரண்டு பேர் சண்ட போடறாங்க, ஒரே கூட்டம் கூடிடுது. மூனாவதா ஒரு ஆள் சத்தமே போடாம டீ வியாபாரம் செஞ்சா - நீங்க இருப்ப்து – “கேரளா”.

இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவதா ஒரு ஆள் வரார் அப்புறம் நாலாவதா ஓரு ஆள், அப்புறம் எல்லோரும் சேந்து யார் செஞ்சது சரின்னு சண்ட போட்டா - நீங்க இருப்ப்து – “சேலம்”

இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவதா ஒரு ஆள் பக்கத்து வீட்லேந்து வந்து “என் வீட்டுகிட்ட சண்ட போட்திங்க வேர எங்கயாவது போய் சண்ட போடுங்க அப்படின்னு சொன்னா நீங்க இருப்ப்து – “அக்கரஹாரம் (தமிழ்நாடு முழ்வதும்)”

இரண்டு பேர் சண்ட போடறாங்க, மூனாவதா ஒரு குடிமகன் ஒரு ஃபுல் பாட்டிலோட வற அப்புறம் எல்லோரும் சேந்து சரக்கு அடிச்சி ஜாலியா இருந்து நன்பர்களா வீட்டுக்கு போனா - நீங்க இருப்ப்து – “பாண்டிச்சேரி”


இந்த மாதிரி உங்க ஊர்ல எப்படின்னு நீங்களும் சொல்லுங்கோ...................




வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன 'நாம் தமிழர்' இயக்கத்தின் தலைவர் சீமான், அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். 'பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்' என கனடா அரசு குற்றம்சாட்ட... இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம்.

''கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?''

''வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் 'ஈழமுரசு' என்னை அழைத்திருந்தது. இதற்கிடையில் 25-ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற

அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட நான் உச்சரிக்கவில்லை. 'தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன. நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம்; உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால் போதும்!' என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.

இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ... அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.''

''கைது நடவடிக்கை மிகக் கடுமையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறதே?''

''மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ். 'இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்?' எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.

பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, 'ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறீர்களா?' என்றார். 'உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா காந்தியைக் கொன்றார்களே... அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா?' எனக் கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது. உடனே நானும் தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, 'இவர் உன்னோட பிரதரா?' எனக் கேட்டார். 'ஆமாம்... தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர் சகோதரர்தான்!' எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் ரெண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார். எதையாவது என் வாயிலிருந்து பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறை யிலேயே சிக்க வைத்து விட வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.''

''பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், மறைந்து விட்டதாகவும் மாறி மாறிக் கிளம்பும் செய்திகளால், உலகத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே? இதனால்தான், தமிழகத் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளில் தங்ளுக்குள் சங்கடம் நேரலாம் என்றெண்ணி இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை என்றும் கருத்து நிலவுகிறதே?''

''வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது. வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்ற வர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள். பிரபா கரனும், அவர் தலைமையிலான தேசிய ராணுவமும் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் - அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள் அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்? தரிசு என்று சொல்லிக்கொண்டே, அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால், அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.''

''ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை தாக்கியது உங்களின் 'நாம் தமிழர்' அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என போலீஸ் சொல்கிறதே?''

''என் வீட்டை தாக்கி, காருக்கு தீ வைத்து, இளங்கோ வனின் போஸ்டரையும் ஒட்டிவிட்டுப் போனவர்களின் மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை? பாரதிராஜாவின் அலுவலகத்தைத் தாக்கியவர்களின் கார் எண்ணைக் கொடுத்தும் இன்று வரை யாரையும் கைது செய்யவில்லை. தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும் யார் மீதும் போலீஸ் வழக்குப் பதியவில்லை. ஆனால், இளங்கோவனின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் தமிழக போலீஸ் சீறிக் கிளம்பியிருக்கிறது. அவசர கதியில் எங்களின் 'நாம் தமிழர்' அமைப்பைச் சேர்ந்த தம்பிகள் நால்வரை கொஞ்சமும் உண்மை இல்லாமல் குற்றவாளியாக ஜோடித்திருக்கிறது போலீஸ்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவனை நாங்கள் தோற்கடித்ததற்காக, வேண்டுமென்றே எங்கள் இயக்கத் தம்பிகளை அவர் கைகாட்டி இருக்கிறார். தைரியமிருந்தால் தேர்தல் களத்தில் இளங்கோவன் எங்களோடு மோதிப் பார்க்கட்டும். சிவாஜி கணேசன், வாழ்ப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அவர்களுக்கு சாமரம் வீசிய இளங் கோவனுக்கு இப்போதுதான் ராஜீவ்காந்தி பாசம் பொத்துக் கொண்டு வருகிறதா? ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார். போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகிவிட்டது. இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. காற்றில் முறியும் முருங்கையல்ல நாங்கள்... வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள்!''





நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு பரவிக் கிடந்தது!

'தலைவர்' தோன்ற மாட்டார்!

நான்காம் கட்ட ஈழப் போரில் புலிகள் பெரி தாக வீழ்ச்சியடைந்து, 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என்று இன்னும்கூட ஒரு தரப்பினர் சொல்லிவரும் நிலையில்தான் மாவீரர் தினம் வருகிறது. பிரபாகரன், பொட்டு அம்மான், யோகி என்று மாவீரர் தின உரையை நிகழ்த்தப் போகும் புலித் தலைவர் பற்றிய யூகப் பட்டியலையும் ஆளுக்கொன்றாக பலர் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களோ இதனை வேறு விதமாகப் பார்க் கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலரிடத்தில் பேசினோம்.

''ஒவ்வொரு வருடமும் தாயகத்தில் மட்டுமே நடக்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இந்த வருடம் உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் கொண்டாடப்படுவதே புலிகளின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றிதான். இதற்கு காரணமே, மீண்டும் வலுவான ஆயுதப் போராட்டம் தலையெடுக்கும் என்று புலிகள் அறிவிக்காமல்

இருப்பதுதான். தற்போதைய சூழலிலும் அப்படியரு தோற்றத்தையே தொடர நினைக் கிறார்கள் புலிகள். அதனால் தற்போதும் உயிரோடிருக்கும் புலிகளின் முக்கியத் தளபதி கள் யாரானாலும், அவர்கள் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எதிர்ப்படும் விளைவுகள் எப்படியிருக்கும் என முன் கூட்டியே கணித்த பிரபாகரன், சமர்க்கள ஆய்வு மைய இயக்குநராக இருந்த யோகியை அப்போதே ஓர் ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். எதிர்காலத்தில் தான் வெளிப்பட முடியாத ஒரு பின்னடைவு உண்டானா

லும்கூட, இயக்கத்தின் எதிர்காலக் கொள்கைகளை சூழலுக்குத் தகுந்தவாறு வெளிப்படுத்தும் அதிகாரத்தை யோகிக்கு மட்டுமே தலைவர் வழங்கியிருந்தார். யோகி தன்னை வெளிப்படுத்தினாலும், வெளிப்படுத்தா விட்டாலும் மாவீரர் தினத்தில் வெளியாகப் போகும் கொள்கைகள் என்னவோ யோகி வகுத்தவையாகத்தான் இருக்கும்.

அதேசமயம், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது!'' என்கிறார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!


மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும்வேளையில், 'பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்'என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியாஉள்ளிட்ட நாடுகளில் ரகசியமாக வலம்வருகிறதாம். ''இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.

''இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்லஸ் ஆன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். 'உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!' என சார்லஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்'' என்று கூறும் குறுந்தகடு 'விநியோகஸ்தர்'கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -

''போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆப்ரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்டு படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய... ராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.

இருந்தாலும், ராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்'' என்று கூறுகிறார்கள் இவர்கள்.

இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். ''பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்'' என முடிகிறதாம் அந்த ரகசிய சர்க்குலேஷன் சி.டி!

இந்தியாவின் துணையோடு இலங்கையில் போர்!

'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் - அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில்.

''போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லை தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.

போர் முடியும்வரை இதற்கு தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்குத் தலையாட்டும் பொம்மையாகிவிட்டது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் டு முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷே, மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப் படுத்தத் தொடங்கியிருப்பதையும் எரிச்சலுடன் பார்க் கிறது.

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டாலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டாலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு ராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு ராணுவத் தளத் தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப் பான 'ரா' மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.
வெடிக்கும் ஃபொன்சேகா!

அதிபர் தேர்தலுக்குத் தயாராகிவரும் ஃபொன்சேகா, சமீபத்தில், கொழும்பிலுள்ள ஒரு பத்திரிகைக்கு இப்படி பேட்டியளித்திருக்கிறார். ''எனது பாதுகாப்பு படையை 25 ஆட்களாகக் குறைத்தபோது, நான் எதிர்த்தேன். பின்பு 60 பேராக அதிகரித்தபோதும் பாதுகாப்பில்லை என தெரி வித்தேன். இப்போது மேலும் 12 சிறப்பு படையினரை ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் இது வரை நான் பார்த்ததுகூட கிடையாது. அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என சந்தேகிக்கிறேன்!'' என ஃபொன்சேகா கொந்தளிக்க, அவசரகதியாக அதனை மறுத்திருக்கிறது சிங்கள அரசு. 'நாட்டுக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த என்னை, அரசு இப்படியெல்லாம் அவமானப்படுத்தலாமா?' என ஃபொன்சேகா எழுப்பியிருக்கும் கேள்வி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தைக் கிளப்பியிருக்கிறதாம். இதற் கிடையில் ஃபொன்சேகாவே சில ஆட்களைவிட்டுத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு அரசாங்கத்தின் மீது பழி போடலாம் என்பதால், அவரது பாது காப்பை திடீரென உயர்த்தியிருக்கிறார்களாம். இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, கொழும்பு ரோயல் கல்லூரி அருகில் ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்கவிருக்கிறாராம் ஃபொன்சேகா. பொதுவேட்பாளர் பற்றி வாய்திறக்காமல் இருந்து வந்த முக்கியக் கட்சியான ஜே.வி.பி-யும் தற்போது ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக களமிறக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது!

இந்தியாவுக்கு மூன்று புறம் ஏற்கெனவே சீனாவால் பலமான ஆபத்து உள்ளது. வடபகுதியில் இருக்கும் சீனா... மேற்கில் பாகிஸ்தானில் மூன்று ராணுவத் தளங்களையும், கிழக்கில் பங்களாதேஷில் இரண்டு ராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஒரே பகுதியாக இருந்து வந்த தெற்கிலும் தற்போது இலங்கையின் ஆதரவினால் கச்சத்தீவில் ராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது. மொத்தத்தில் இலங்கையில் தற்போது வரப்போகும் தேர்தலில் ராஜபக்ஷே, ஃபொன்சேகா என யார் ஜெயித்தாலும் சரி... இந்தியாவுக்கு அது ஒருவகையில் தோல்வியாகவே முடியும் நிலை! இதெல்லாம், புலி ஆதரவாளர்களால் ஏற்கெனவே தீர்க்கதரிசனத்தோடு சுட்டிக் காட்டப்பட்ட எச்சரிக்கைகள்தான். இப்போது சூடு கண்ட நிலையில், தன் பார்வையை மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது இந்திய அரசு'' என்று கூறும் புலி தரப்பினர்,

''இதையெல்லாம் ஊன்றி கவனிக்கிறார்கள் எஞ்சி உள்ள புலித் தலைவர்கள். இலங்கையில் மீண்டும் ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முனையும். அதற்கு தோதாக புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து, ஆயுதம் மற்றும் யுத்த தந்திர உதவிகளையும் இந்திய அரசு செய்வதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட, இலங்கையின் வரலாற்றுச் சக்கரம் ஆரம்பத்திலிருந்து சுழலும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு!'' என்கிறார்கள்.

'யுத்தத்தை யார் புலிகள் தரப்பில் நடத்துவார்கள்?' என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதிலுண்டு!

''சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் ராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன். அப்போது 'ராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க்குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்' என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை.

அதன்படி, பொட்டு அம்மானில் தொடங்கி கதிர்காமத்தம்பி அறிவழகன், பாலசிங்கம், ராஜரத்தினம், அண்டு வேல்மன், இளங்கப்பிள்ளை, வீரசிங்கம், ரஞ்சித் பெர்ணாண்டோ, டேவிட் பூபாலபிள்ளை, லூகாஸ் பால சிங்கம், நடராசா மதிதரன், ஜேம்ஸ் கருணாகரன், சதியன் குமரன், பாலச்சந்திரன், ஜெகன்மோகன் உள்ளிட்ட புலனாய்வுப்பிரிவின் முக்கியத் தளபதிகள் 57 பேர் உலக நாடுகள் முழுவதிலும் சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சமயம் பார்த்து வெளியில் வருவார்கள்'' என்பதே இவர்கள் தரும் நம்பிக்கையான விளக்கம்!



நன்றி ஜு.வி




விண்டோசு 7 இயக்கு தளம்(அதாங்க operating system) போன மாசம் வெளிவந்துருக்கே என்ன விலை அப்படி விசாரிக்கலாம்ன்னு எங்க ஊர்ல உல்ல ஒரு கடைக்கு போனேன்! போய் விசாரிச்சா உங்களுக்கு எது வேனும்32 பிட்டா அல்லது 64 பிட்டா அல்லது 86 பிட்டான்னு கேட்டான் அது இல்லாம விண்டோசு 7 மொத்தம் 6 விதமா வெளியிட்டு உள்ளார்கள் ex விண்டோசு 7 Home Premium (for home consumers), விண்டோசு 7 Professional (for small and medium businesses), விண்டோசு 7 Starter, விண்டோசு 7 Home Basic (for emerging markets), விண்டோசு 7 Enterprise and விண்டோசு 7 Ultimate.
அதன் விலை ரு.5,800 முதல் ரு.11,000 வரை உள்ளது.

சரி விஷயத்துக்கு வருவோம்

நம் கனினீ 32 பிட்டா அல்லது 64 பிட்டா அல்லது 86 பிட்டா என்று எப்படி கண்டுபிடிக்கரதுன்னு பார்ப்போம்

இரண்டு வழிகள்

1. Using Regedit

Go to Start -> Type regedit
Browse to HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor\0
அதில் Identifierக்கு பக்கத்தில் dataக்கு நேராக ”x86 Family 6 Model 23 Stepping 6” xக்கு பிறகு என்ன உள்ளதோ அதுதான் உங்க கனினீயின் பிட் வேகம்.

2. Using MSINFO32

Go to Start -> run - > Type msinfo32.exe

அதில் system Type or Processor க்கு நேராக “x86 Based PC" என்று இருந்தால் உங்க கனினீயிக்கு விண்டோசு 7 X 86 based இயக்கு தளம் வாங்கலாம்.

Doctor -- வைத்தியன்நாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
North Indian Lawyer -- பஞ்சாபகேசன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- ம்னோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யானசுந்தரம்
Ophthalmologist -- கன்ணாயிரம்
ENT Specialist -- நிலகண்டன்
Diabetologist -- சக்கரபானி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்ப்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திரிப்புர சுந்தரி
Driver -- சாரதி
Attentive Driver -- பார்த்த சாரதி


உங்களுக்கு தெரிந்த வேற எதாவது இருந்தாலும் எழுதுங்க.....

CIGARETTE:
A pinch of tobacco
rolled in paper
with fire at one end
and a fool at the other!



MARRIAGE:

It's an agreement
wherein
a man loses his bachelor degree
and a woman gains her master


LECTURE:
An art of transmitting Information
from the notes of the lecturer
to the notes of students
without passing through the minds
of either


CONFERENCE:
The confusion of one man
multiplied by the
number present




COMPROMISE:
The art of dividing
a cake in such a way that
everybody believes
he got the biggest piece



TEARS:
The hydraulic force by which
masculine will power is
defeated by feminine water-power!




DICTIONARY:
A place where divorce comes
before marriage




CONFERENCE ROOM:
A place where everybody talks,
nobody listens
and everybody disagrees later on




ECSTASY:
A feeling when you feel
you are going to feel
a feeling
you have never felt before




CLASSIC:
A book
which people praise,
but never read




SMILE:
A curve
that can set
a lot of things straight!




OFFICE:
A place
where you can relax
after your strenuous
home life



YAWN:
The only time
when some married men
ever get to open
their mouth


ETC:(Extra)
A sign
to make others believe
that you know
more than
you actually do



COMMITTEE:
Individuals
who can do
nothing individually
and sit to decide
that nothing can be done
together



EXPERIENCE:
The name
men give
to their
Mistakes



ATOM BOMB:
An invention
to bring an end
to all
inventions


PHILOSOPHER:
A fool
who torments himself
during life,
to be spoken of
when dead


DIPLOMAT:
A person
who tells you
to go to hell
in such a way
that you actually look forward
to the trip




OPPORTUNIST:
A person
who starts taking bath
if he
accidentally falls
into a river



OPTIMIST:
A person
who while falling
from EIFFEL TOWER
says in midway
"SEE I AM NOT INJURED YET!"


PESSIMIST:
A person
who says that
O is the last letter
in ZERO,
Instead of the first letter
in OPPORTUNITY


MISER:
A person
who lives poor
so that
he can die RICH!




FATHER:
A banker
provided by
nature



CRIMINAL:
A guy
no different
from the other,
unless he gets caught



BOSS:
Someone
who is early
when you are late
and late
when you are early



POLITICIAN:
One who
shakes your hand
before elections
and your Confidence
Later



DOCTOR:
A person
who kills
your ills
by pills,
and kills you
by his bills!


சரி சிரிச்சது போதும்.

இதை யாராவது தமிழில் மொழிபெயர்க்கவும்.

நன்றி

தரவிரக்கம் செய்ய கிழே உள்ள லிங்கை சொடுக்கவும்


http://hotfile.com/dl/14106927/23420ae/Convert_Image_To_Text_0.9.6.exe.html


இதோ உதாரனம்

புகைப்படம் மூன்




புகைப்படம் பின்




பின் குறிப்பு

நம்ம அற்காடு வீராசாமி தயவால் ஒரு இரவு மின்சாரம் இல்லாமல் இருக்கும்போது என் செல்லகுட்டி குடுத்த ஒரு அருமையான புகைப்படம்.

(மனசுல பெரிய பி.சி. ஸ்ரீராம்னு நினைப்பு) அப்படின்னு சொல்லுரது காதுல விழுது.




Below are four (4) questions and a bonus question. You have to answer them instantly. You can't take your time, answer all of them immediately. OK?


Let's find out just how clever you really are......



Ready? GO!!! (scroll down)












First Question:

You are participating in a race. You overtake the second person. What position are you in?







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




Answer: If you answered that you are first, then you are
absolutely wrong! If you overtake the second person and you take his place, you are second!

Try not to screw up next time.
Now answer the second question,
but don't take as much time as you took for the first question, OK ?

Second Question:
If you overtake the last person, then you are...?
(scroll down)









~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




Answer: If you answered that you are second to last, then you are wrong again. Tell me, how can you overtake the LAST Person?


You're not very good at this, are you?










Third Question:
Very tricky arithmetic! Note: This must be done in your head only .
Do NOT use paper and pencil or a calculator. Try it.



Take 1000 and add 40 to it. Now add another 1000 . Now add 30 .
Add another 1000 . Now add 20 . Now add another 1000
Now add 10. What is the total?


Scroll down for answer.....









~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Did you get 5000?

The correct answer is actually 4100.



If you don't believe it, check it with a calculator!
Today is definitely not your day, is it?
Maybe you'll get the last question right....
....Maybe.



Fourth Question:

Mary's father has five daughters: 1. Nana, 2. Nene, 3. Nini,
4. Nono. What is the name of the fifth daughter?







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Did you Answer Nunu?
NO! Of course it isn't.
Her name is Mary. Read the question again!



Okay, now the bonus round:

A mute person goes into a shop and wants to buy a toothbrush. By
imitating the action of brushing his teeth he successfully
expresses himself to the shopkeeper and! the purchase is
done.
Next, a blind man comes into the shop who wants to buy a pair of
sunglasses; how does HE indicate what he wants?









~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



He just has to open his mouth and ask...
It's really very simple.... Like you!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது எருக்கலக்கோட்டை கிராமம். இங்கு ஒரு மிகப்பெரிய அரசமரம் இருந்தது. அதற்கு அருகில் அரசுப் பள்ளி.

பள்ளியை விரிவுபடுத்த எட்டு மாதங்களுக்கு முன்பு அந்த அரச மரத்தின் மேல் பாகத்தில் 10 அடி உயரத்துக்கு வெட்டிவிட்டார்கள். அதோடு, பொக்லைன் இயந்திரம் வைத்து மரத்தின் அடி பாகத்தையும் பெயர்த்து வேருடன் கீழே சாய்த்துவிட்டனர்!

இது நடந்து எட்டு மாதங்களுக்குப் பின்பு கடந்த சனிபெயர்ச்சி அன்று இரவு, திடீரென்று பெரும் சத்தத்துடன்... அட, நம்புங்க... தானாகவே அந்த அரச மரம் மீண்டும் எழுந்து நின்றுவிட்டதாம்! சுற்றுப்புற ஊர்களில் இந்த மரத்தைப் பார்த்து மக்கள் கூடி அதிசயப் பரபரப்புக்கு அச்சாரம் போட... நாமும் அங்கு சென்றோம்.

மரம் எழுந்ததை(!) நேரில் பார்த் ததாகச் சொன்ன முருகேசன் நம்மிடம், ''அந்த

அரசமரம் இருந்த இடத்துல நாகம்மா சிலை இருந்துச்சு. அந்த மரத்துல ஐந்து தலை நாகம் மாதிரியான ஒரு வடிவம் இருக்கும். இருந்தாலும், எங்க ஊர் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியா உசத்தறதுக்காக, அந்த மரத்தை வெட்றதுக்கு ஊர்மக்கள் சம்மதிச்சோம்.

நாகம்மா சிலையை வேறொரு இடத்துக்கு மாத்திட்டு, பொக்லைன் வெச்சு மரத்தோட மேல் பாதியை வெட்டிக் கொண்டுபோய்ட்டாங்க. அடி பாகம் அப்புறப்படுத்தாம கிடந்துச்சு. இந்த நிலையில, சனிப்பெயர்ச்சி அன்னிக்கு ஒரு ஏழு மணியிருக்கும்... நான் மரத்துக்கு கொஞ்ச தூரம் தள்ளி நின்னுட்டு இருந்தேன்.

அப்ப, திடீர்னு சங்கு ஊதுற மாதிரி ஒரு சத்தம்! பதறி திடுக்கிட்டு சத்தம் வந்த பக்கம் பாத்தேன்... அங்கே சாய்ஞ்ச மரம் நிமிர்ந்திருந்துச்சு! உடனே ஊர்ல போய் எல்லார்ட்டயும் சொன்னேன். அப்புறம்தான் 'நாகம்மாவே திரும்ப அந்த இடத்துக்கு வந்துட்டாள்'னு தெரிஞ்சுகிட்டோம். உடனே ஊர்ல உள்ள 70 குடும்பமும் சேர்ந்து பொங்கல் வெச்சுப் படையல் போட்டோம். சுத்துப்பட்டுலயிருந்து எல்லா ஜனங்களும் வந்து இந்த இடத்தை ஆச்சர்யமா பாத்துட்டுப் போறாங்க..!'' என்று ஆச்சர்யம் விலகாமல் சொன்னார்.



''இது சாத்தியமா?'' என்று கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் தியாகராஜனிடம் கேட்டோம்...நிமிர்ந்த மரத்தின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவர், ''மரத்தின் அடி வேர் பகுதியில் அதிகளவில் மண் உள்ளது. மரமும் முக்கால்வாசி தான் சாய்ந்துள்ளது. மரத்தை வெட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் வைத்து மரத்தைச் சுற்றி குழிபறித்து, பிறகு மரத்தை சாய்த்துள்ளனர். மரத்தின் வேர் பகுதியில் அதிக எடையுடன் மண்பிடிப்பு இருந்ததால், அது பூமியில் கீழேயிறங்கி, மரம் மறுபடி மேலே எழ மிக அபூர்வமாக வாய்ப்புள்ளது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை எப்படி எந்த நிலையில் வைத்தாலும் மீண்டும் அதே நிலைக்கு வருகிறதோ அப்படித்தான் இந்த மரமும் எழுந்துள்ளது. அதற்கு காரணம் மைய ஈர்ப்பு விசை. மற்றபடி, மரம் தானாகவே நிமிர்ந்திருந்தாலும் அதற்கு அற்புத சக்தி என்றெல்லாம் சொல்வது மூடநம்பிக்கை!'' என்றார்.

எந்த ஈர்ப்பு சக்தியாக இருந்தாலென்ன... எருக்கலக்கோட்டையின் அந்த பாதி அரச மரம் இப்போது மக்கள் புண்ணியத்தில் மஞ்சள் துணி சுற்றிக்கொண்டு, புத்தம்புது உண்டியலில் காணிக்கை ஈர்க்க ஆரம்பித்துவிட்டது!


நன்றி
ஜூ.வி






ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது," என அறிவித்தது.

இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.


வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன

தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ்

அடா இ.யோனத்

ரைபோசோம்களின் முக்கியத்துவம்!

நமது உடலின் இயக்கத்துக்கு முக்கியப் பயங்காற்றும் மரபணுவிலுள்ள ரைபோசோம்கள் எவ்வாறு புரதத்தை உறுபத்தி செய்கின்றன என்பது உள்ளிட்ட ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய மகத்தான ஆராய்ச்சிகளுக்கே இம்மூவருக்கும் நடப்பாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அனைத்து உயிரினங்களுடைய உயிரணுக்களுக்குள் மரபணு மூலக்கூறுகள் இருக்கும். அதன் மூலம் மனித இயக்கம் பற்றி அறிந்து கொள்ளலாம். மரபணுக்களின் தகவல்களின் அடிப்படையில் ரிபோசோம்களானது புரதத்தை உற்பத்தி செய்கின்றன. நமது உடலில் வெவ்வேறு வடிவமும் இயக்கமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான புரதங்கள் உள்ளன. அவை நமது உடலின் வேதியியல் அளவை கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

உயிரின் அடிப்படையை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கு ரிபோசோம்கள்களின் இயக்கத்தை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கான ஆன்டிபயோடிக்ஸை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரிபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய இம்மூன்று விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஸ்வீடன் அறிவியலாளரும், டைனமிட்டை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபர்ட் நோபலின் நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசுகள், அவரது நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று வழங்கப்படுவது வழக்கம்.




வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், 1952-ம் ஆண்டு தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர். இவர் 1971-ம் ஆண்டில் பரோடா பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயற்பியல் படிப்பை முடித்தார். பின்னர், ஓகியோ பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற வெங்கட் ராமகிருஷ்ணன், தற்போது இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் எம்.ஆர்.சி. லெபாரட்டரி ஆஃப் மோல்குலர் பயாலஜியின் ஸ்ட்ரக்சுரல் ஸ்டடிஸ் பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பற்றி மேலும் அறிய...
http://www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/index.html

வாழ்த்துகள் ஐயா...
அன்புடன்
சரவணன்.






1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள்,
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.



4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும்
தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.

அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம்.
அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு
ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்

பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய்
இருப்பதில்லை


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்


16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்


17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்


18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்


19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்



20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்


21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்


22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்


25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்


26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்


27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்


28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச்
சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்
தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க
வேண்டும்


32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான்
கோழைத்தனம்.


33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.



அன்புடன்
சரவணன்,



இதற்க்கு தேவையானவை


1. VLC player
2. British T.V. Exe


முதல் படி

VLC player download செய்ய

http://rapidshare.com/files/272763894/V1L1C.rar

அல்லது

www.vlcplayer.com என்ற இனையதளத்தில் இருந்து download செய்யலாம்

இரண்டாம் படி

British T.V. Exe download செய்ய

http://rapidshare.com/files/287839726/britishtv-windows.zip

பின்

1. vlcplayer install செய்யவும்
2. British T.V. Exe install செய்யவும்
3. கிழ் உள்ள படத்தில் உல்லது போல் திரையில் தோன்றும் அதில் செனல் என்னை அழுத்தவும்
உதாரணம் 1 =BBC one & 2 = BBC two





4. சிறிது நேரம் காத்ருக்கவும் சில வினாடிகளில் vlcplayer யில் என்னுக்கு எற்ற தொலைக்காட்சி buffer ஆகும்.

Mac க்கான British T.V. Exe download செய்ய

http://rapidshare.com/files/287841737/britishtv-mac.zip

Linux 32 bit British T.V. Exe download செய்ய

http://rapidshare.com/files/287840234/britishtv-linux32bit.zip

Linux 64 bit British T.V. Exe download செய்ய

http://rapidshare.com/files/285676515/britishtv-linux64bit.zip

நீங்கள் விரும்பினால் நிகழ்ச்சியை பதிவும் செய்யலாம்.
Selecting view on the taskbar Right Click, enable 'advanced controls' and a record button should appear.

Press the button and it records


நன்றி.

டாக்டர் எலின் ஷான்டர்... போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி,




அமெரிக்காவின் புகழ்பெற்ற டாக்டர்; கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர் களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார். வட அமெரிக்காவில் ஒரு மாநாட்டில், இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து, 'எலின் ஷான்டர் வெள்ளைக்கார தமிழச்சி...' என்று வியந்தார்! இலங்கை அகதி முகாம்களில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கக் கோரி மெக்ஸிகோ நகரில் கடந்த 22-ம் தேதி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார், எலின் ஷான்டர். இவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து ஒரு கருத்தரங்கத்தில் பேச வைக்க வைகோவும், மா.நடராஜனும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசு இவருக்கு விசா வழங்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் அவரைத் தொலை பேசியில் தொடர்புகொண்டோம்...

''இந்திய அரசால் உங்கள் விசா கடைசி நேரத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறதே..?''

''உண்மையில் இந்தியாவுக்கு வர ஒரு மாதம் முன்பே விசா கிடைத்து விட்டது. ஆனால், நான் புறப்படும் இரு தினங்களுக்கு முன்பு, விசா கேன்சல்

செய்யப்பட்டதாக போன்...இந்தியாவில் இருக்கும் ஒரு மத்திய தமிழ் மந்திரியின் வற்புறுத்தலின் பேரில்தான் விசா கேன்சல் என கூறினார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கும் பேச்சுரி மைக்கும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்பதைத்தான் இது காட்டு கிறது. உலகில் வேறெங்குமே நடக்காத ஒரு கொடூரம், தமிழகத்திலிருந்து வெகு அருகில் உள்ள இலங்கையில் நடந்தும்... அதற்க்கான எதிர்ப்பு இந்தியாவிலிருந்து எழவில்லை. இதற்கு பதில் கேட்கத்தான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். கடைசியில் தடுக்கப்பட்டேன். ஆனாலும் நான் இந்தியா வர போராடுவேன்..!''

''அமெரிக்கரான நீங்கள் அகதி முகாம்களில் வாடும் அப்பாவி தமிழர் களுக்காக போராட முன்வந்தது ஏன்?''

''இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி முகாமில் அடைத்து வைக்கப்பட்டு, பெரும் சித்ரவதைகளுக்குப் பிறகு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்தேன்... தனி மரமானேன். உலகின் எந்த மூலையில் ஒரு குறிப்பிட்ட இனம் கொடுமைப்படுத்தப்பட்டாலும், அது என்னை பாதிக்கும். அந்த வலி தெரியும். முன்பு இலங்கையில் சுனாமி நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். அப்போது தமிழீழ மக்களின் அன்பும், மன தைரியமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களின் சொந்தக்காரியாகவே என்னை நினைக்கிறேன்.
இனப்படுகொலையால் அங்கே இறந்த ஈழத் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொருவரும் மகன், அப்பா, அம்மா என உறவுகளை இழந்து தவிப்பது பேரவலம். மே மாதத்தில் மட்டும் 30,000 அப்பாவி மக்களை தமிழினம் இழந்தது. பல்லாயிரக்கணக்கானோர், முடமாகியும் அநாதையாகியும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக நான் போராடுவதுதான் மனித நேயத்துக்கான சரியான அடையாளம்...''

''இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் உங்களுக்குக் கிடைத் திருப்பதாகச் சொல்கிறார்களே?''

''ஆம். பருவ மழை தொடர்ந்து பெய்வதால், இப்போது அகதி முகாம்களில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அம்மை நோய் பரவுகிறது. உணவு, சுகாதாரம் எதுவுமே அங்கே சரியாக இல்லை. வாரத்துக்கு 1,500 பேர் கொல்லப்பட்டு, முகாமின் வேலிகளுக்கு வெளியே திறந்த வெளியில் வீசப்படுகிறார்கள். யாராவது கேட்டால் சித்ரவதை செய்து கொன்று அவரையும் வீசிவிடுகிறார்கள். பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதோடு, உடைகளே தராமல் பிறந்த மேனியாக அலையவிட்டிருக்கிறார்கள். யுனிசெஃப்பின் வவுனியா மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் சிங்கள மருத்துவர்கள் ஊசி போட்டுக் கொன்று வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. எவரையும் தங்கள் குடும்பத்தோடு வைக்காமல், வெவ்வேறு முகாம்களில் பிரித்து, கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதுவரை முகாமில் 10 ஆயிரம் மக்கள் காணாமல் போயிருக்கின்றனர். எங்கு சென்றனர், என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை! என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே இதுதான் மிகப்பெரிய, கொடிய சிறைச்சாலை!''

செஞ்சிலுவை சங்கத்தினருக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பும் மரியாதையும் இலங்கையில் கிடைக்கிறதா?''

''பல்வேறு பத்திரிகையாளர்களும், மனித உரிமைக் குழுவினரும் இலங்கையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது உலகத்துக்கே தெரியும். யுனிசெஃப், செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு துளிகூட பாதுகாப்பு கிடையாது. பல்வேறு யுனிசெஃப் பெண் பிரதிநிதிகள்கூட பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போரில் சிக்கி உயிரிழந்தார்கள் என்று இலங்கை அரசு சொன்ன உதாரணங்களும் நிறைய இருக்கிறது. ஹிட்லரை விடவும் மோசமானவர் ராஜபக்ஷே... அதை நிரூபிக்கும்படியான சம்பவங்கள்தான் இலங்கையில் நடந்துகொண்டே இருக்கின்றன!''

''இலங்கை நிலவரம் குறித்து, ஒபாமா அல்லது ஹிலாரி கிளிண்டனிடம் பேசினீர்களா?''

''இருவரிடமும் பேசும் வாய்ப்பு அமையவில்லை. அமெரிக்க ஸ்டேட் செக்ரெட்டரி ராபர்ட் பிளேக்கிடம் இதுகுறித்து விரிவாகப் பேசினேன். அவர், ஒபாமாவிடம் பேசுவதாக கூறினார். விரைவில் இந்தப் பிரச்னை குறித்து மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக என்னிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார் ராபர்ட்...''

''நீங்கள் பேசிய ஒரு சி.டி-யில் 'தமிழீழம் மலரும்' என்று கூறியுள்ளீர்கள். அதற்கான சாத்தியக்கூறு என்ன?''

''தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர் களின் பிறப்புரிமை. இலங்கையை முழு சிங்கள தேசமாக மாற்றலாம் என்று வெறித் தாண்டவம் ஆடும் ராஜபக்ஷேவுக்கு, உலக நாடுகளிடமிருந்து மிகப்பெரிய கண்டனங் களும் ஆபத்துகளும் இனிதான் வரப் போகின்றன. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும்... பொறுத்திருந்து பாருங்கள்!''

''உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''

''கண்ணி வெடிகளைக் களையெடுக்கிறோம் என்ற பேரில் சிங்களரை தமிழர் பகுதியில் குடியேற்றம் செய்துவரும் ராஜபக்ஷேவிடம், அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனே விடுவிக்கக் கோரி உலக நாடுகளை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்த இருக்கிறோம். இனியும் விடுதலைப் புலிகள் என்று அப்பாவி மக்களை சித்ரவதை செய்வதை அனுமதிக்கக் கூடாதென உலக நாடுகள் கிளர்ந்து எழும். இலங்கைக்கு செய்துவரும் ராணுவ, வாணிப ரீதியான உதவிகளை முடக்க உலக நாடுகளில் விழிப்பு உணர்வு மாநாடுகள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் இலங்கை அரசு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்!''

'எதற்கு இவை?', 'யார் சிருஷ்டித்தார்கள்?' என்று குழப்பிஅடிக்கும் மர்மப் பிரதேசங்கள் உலகம் முழுக்க உண்டு. அவற்றுள் சில...

ஈஸ்டர் தீவுகள் (Easter Island)

தென்அமெரிக்காவில் இருந்து 2,200 மைல் தொலைவில் பசிபிக் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ளது ஈஸ்டர் தீவு. இந்தத் தீவுக்கு 1722-ம் வருடம் முதலில் கால் வைத்தவர் ஜேக்கப் ரோகோவீன் என்ற கப்பல் மாலுமி.

அப்போது, அங்கு மனிதர்களே இல்லை. ஆனால், மனித முகங்கள் மட்டுமே செதுக்கப்பட்ட மெகா சைஸ் சிற்பங்கள் இருந்தன. கிட்டத்தட்ட 10 மீட்டர் உயரம்கொண்ட இந்தச் சிலைகளின் எடை 75 டன்களுக்கும் அதிகம்.

முகம் மட்டும் கவனமாகச் செதுக்கப்பட்ட இந்த சிற்பங்களுக்கு 'மோய்'

(Moal statue) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தச் சிலைகளைத் தூக்கி வந்து வைத்ததும் மனிதர்களால் இயலக்கூடிய காரியம் அல்ல என்பதால், மர்மம் இன்னும் உடைபடாமலே இருக்கிறது!

ஸ்டோன்ஹென்ஜ் (Stonehenge)

பிரிட்டன் வில்ட்ஷயர் பகுதியில் அமைந்து இருக்கும் இந்த இடம், நம் ஊர் சுமைதாங்கிக் கற்களை ஞாபகப்படுத்தும். இந்தக் கற்கள் ஒரு வட்டத்தை உருவாக்குகின்றன. இந்தக் கற்கள் எல்லாம் கி.மு. 3000-ல் இருந்து இங்குதான் இருக்கின்றனவாம். ஒவ்வொரு கல்லும் டன் கணக்கில்எடை கொண்டவை. ஏதோ மந்திரவாதி சடங்குகள் செய்யத் தோதாக அமைந்த மாதிரி இருக்கும் இவற்றுக்கு அடியில், நிறைய எலும்புக்கூடுகள் இருப்பதால், இது கல்லறை என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், எலும்புகளைத் தவிர மனிதர்கள் பயன்படுத்தும் எந்தப் பொருளும் இங்கே இல்லை. இதனால் வேற்றுக் கிரகவாசிகள் பூலோக மனிதர்களைப் பலி கொடுத்து ஏதேனும் செய்தார்களா என்றும் மர்மம் நீள்கிறது!

நாஸ்கா லைன்ஸ் (Nazca Lines)

பெரு நாட்டில் அமைந்திருக்கும் 'ஜியோக்ளிப்' (Geoglyph) வகை பாலைவன ஓவியங்கள் கி.மு. 200-லிருந்து கி.பி.700-க்குள் உருவானவை. சிவப்பு மணலுக்கு நடுவே தோண்டி, கீழே உள்ள வெள்ளை நிற அடுக்கு தெரியும்படியான ஓவியங்களில் சிலந்தி, குரங்கு, மனிதன், பல்லி என்று பழக்கமான உருவங்கள் தான். கிட்டத்தட்ட 200 மீட்டர் அளவுக்குப் பெரிதாக அமைந்திருக்கும் இந்த ஓவியங்கள் 300-க்கு மேல் உள்ளன. விமானத்தில் பறந்தால் மட்டுமே பார்க்க முடியும் உருவங்களை, எந்த வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் இவ்வளவு கச்சிதமாக எப்படி உருவாக்கினார்கள்... யார் உருவாக்கினார்கள் என்பது இன்னமும் புரியாத புதிர்!

க்ராப் சர்க்கிள்ஸ் (Crop circles)

உங்கள் வீட்டுக்குள் திடீரென ஒரு பகுதி மட்டும் வட்ட வடிவில்அழிந்துபோனால் என்ன நினைப்பீர்கள்? கடந்த 300 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 நாடுகளில் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் நிலங்களுக்கு நடுவே பல 100 மீட்டர்கள் நீளத்தில்பயிர்கள் அழிக்கப்பட்டு, இந்த டிசைன்கள் உருவாகும். ஒரே இரவில், மனித சக்தியால் சத்தமே இல்லாமல் இதை உருவாக்க முடியாது என்பதால், அந்த வயல்களை ஏதோகெட்ட சக்தி பிடித்து ஆட்டுகிறது என்று கருதி, அருகிலேயே செல்ல மாட்டார்களாம். சுழல் காற்று, மின்னல் போன்ற பல இயற்கை அமைப்புகளைக் காரணமாகயோசித்தாலும் நேரடி ஆதாரம் எதுவும் இல்லை!




சீமான் விவரிக்கும் சிலிர்ப்பான சந்திப்பு

சீமான்-முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர் படும் துயரம் பற்றிப் பேசும்போது கூடியிருப்போரைக் கலங்கி அழ வைக்கிறார். 'பிரபாகரன் விரைவில் வருவார்!' என்று அடித்துச் சொல்லி மிரளவைக்கிறார். என்ன பேசினாலும், எது கேட்டாலும் படபட பட்டாசு பொறிதான். மதுரை, தூத்துக்குடியில் முழங்கிவிட்டு

திருப்பூர் ஆரவாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். சீமானின் 'நாம் தமிழர் இயக்கம்' அடுத்த மே மாதம் மாநில மாநாட்டை அரங்கேற்றுவதற்கான முனைப்பில் இருக்கிறது.

ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சீமானைச் சந்தித்தேன்.

''கொடூரமாகப் பல கொலைகள் நடந்திருப்பதற்கான புகைப்பட, சலனப்பட ஆதாரங்கள் இப்போது வெளியில் வந்துகொண்டு இருக்கின்றன. இது குறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்கிறாரே முதல்வர்?''

''தமிழ் இளைஞனை கண்ணைக் கட்டி, நிர்வாணப் படுத்தி சுட்டுக் கொன்ற கொடூரத்தை இந்திய அரசாங்கம் இதுவரை கண்டிக்கவில்லை. ஏன் என்பதற்கான உண்மையான அர்த்தம் அவர்களுக்குத்தான் தெரியும்.''

''தமிழர்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை வாங்கிக் கொள்ளலாம், தனி நாடு கேட்பதால்தான் இலங்கை அரசு பயப்படுகிறது என்கிறார்களே?''



ப.திருமாவேலன்

'கண்டேன் பிரபாகரனை!'
சீமான் விவரிக்கும் சிலிர்ப்பான சந்திப்பு

சீமான்-முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர் படும் துயரம் பற்றிப் பேசும்போது கூடியிருப்போரைக் கலங்கி அழ வைக்கிறார். 'பிரபாகரன் விரைவில் வருவார்!' என்று அடித்துச் சொல்லி மிரளவைக்கிறார். என்ன பேசினாலும், எது கேட்டாலும் படபட பட்டாசு பொறிதான். மதுரை, தூத்துக்குடியில் முழங்கிவிட்டு

திருப்பூர் ஆரவாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். சீமானின் 'நாம் தமிழர் இயக்கம்' அடுத்த மே மாதம் மாநில மாநாட்டை அரங்கேற்றுவதற்கான முனைப்பில் இருக்கிறது.

ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சீமானைச் சந்தித்தேன்.

''கொடூரமாகப் பல கொலைகள் நடந்திருப்பதற்கான புகைப்பட, சலனப்பட ஆதாரங்கள் இப்போது வெளியில் வந்துகொண்டு இருக்கின்றன. இது குறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்கிறாரே முதல்வர்?''

''தமிழ் இளைஞனை கண்ணைக் கட்டி, நிர்வாணப் படுத்தி சுட்டுக் கொன்ற கொடூரத்தை இந்திய அரசாங்கம் இதுவரை கண்டிக்கவில்லை. ஏன் என்பதற்கான உண்மையான அர்த்தம் அவர்களுக்குத்தான் தெரியும்.''

''தமிழர்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை வாங்கிக் கொள்ளலாம், தனி நாடு கேட்பதால்தான் இலங்கை அரசு பயப்படுகிறது என்கிறார்களே?''

''இதெல்லாம் வரலாறு அறியாத அம்மண்ணின் துயர் புரியாதவர்களின் பேச்சு. தமிழீழ மக்களுக்கு அந்தத் தேசத்தில் பங்கு பாத்தியதை இருக்கிறதுதானே? அப்படியென்றால், அம்மக்கள் கொடுமைப்பட்டது ஏன்? சிங்களவன் வைத்திருக்கும் துப்பாக்கி தமிழனை மட்டும் சுட்டது ஏன்? அவன் பேசிய தமிழ் மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தமிழ்ப் பெண்ணை விரட்டி விரட்டிச் சூறையாடியது ஏன்? எல்லாம் இனவாத நோக்கம்தான். இந்த வெறுப்பும் வக்கிரமும் ஆரம்பம்தொட்டே இருந்ததால்தான் தமிழனால் அவர்களுடன் ஐக்கியமாகி வாழ முடியவில்லை. தனி நாடு கேட்டான்.

தமிழனாக இருந்துகொண்டு இதைச் சொல்லவே எனக்கு நாக்கு கூசுகிறது. ஆனாலும், அதுதான் உண்மை. தற்காலத் தமிழன் இனத்தைவிட பணத்தை மதிப்பவன். அதைக் கொடுத்து வாக்குகள் வாங்கிவிடலாம் என்பதால்தான், இந்தத் துரோகம் நடந்தது. ஆனால், கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல சங்கதியாக இன்றைய இளந் தலைமுறை அதைப் புரிந்துவைத்திருக்கிறது. அதை ஆக்க சக்தியாக மாற்றும் வேலையைக் கட்டளையாகப் பணித்துதான் தலைவர் பிரபாகரன் என்னை அனுப்பியிருக்கிறார்!''

''பிரபாகரனை நீங்கள் சந்தித்தீர்கள் என்று முன்பு செய்தி உலவியது... அதுபற்றி நீங்கள் இப்போதாவது பேசலாமே...''

''இந்திய ராணுவ உதவியுடன் சிங்களவன் தொடுத்த தந்திரப் போர் உக்கிரமடைவதற்குச் சில நாட்களுக்கு முன் தலைவர் பிரபாகரனை நான் சந்தித்தேன். முழுக்க முழுக்க நள்ளிரவுப் பயணமாகவே இருந்தது அது. நானும் நடேசன் அண்ணாவும் பின்னால் உட்கார்ந்திருக்க... ஜீப் எங்களை அழைத்துச் சென்றது. திடீரென்று நின்ற வண்டியில்இருந்து அதுவரை ஓட்டி வந்தவர் இறங்கிக்கொண்டார். தொடர்ந்து நடேசன் ஓட்ட ஆரம்பித்தார். சில கிலோ மீட்டர்கள் போனதும் ஜீப்பின் விளக்கு கள் அணைக்கப்பட்டன. இருட்டுக்குள் ஜீப் தனக்கு மட்டுமே தெரிந்த திசையில் பயணமானது. ஒரு மணி நேரம் கழித்து நான் இறங்கிய இடம் சாதாரண குடிசை. உள்ளே தலைவர் இருக்கிறார் என்று ஆசையுடன் போனேன். இல்லை அவர்!

அரை மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு வாகனம் வந்தது. 'புலி உறுமிக்கொண்டு வருகிறது!' என்றார் நடேசன் சிரித்தபடி. நான் தங்கியிருந்த குடிசைக்குப் பின்னால் அழைத்துப் போனார்கள். அங்கு இன்னொரு குடிசை இருந்தது. வாசலில் நின்றிருந்தார் என் தலைவர் பிரபாகரன். பார்த்ததும் உருகிப் போனேன். பாய்ந்து சென்று கட்டி அணைத்தேன். வணக்கம் வைத்து, சின்னச் சிரிப்புடன் என்னை அழைத்துச் சென்றார். உள்ளே பொட்டு அம்மான், தமிழேந்தி இருவரும் இருந்தார்கள். வெகுநேரம் வரையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவரேதான் நாத்திகம், கடவுள் நம்பிக்கை குறித்துப் பேச ஆரம்பித்தார். ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. அப்புறமாகத்தான் எனக்கு மூளையில் உறைத்தது. பிரபாகரனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக, சுமார் ஒரு வார காலம் அங்குள்ள போராளிகள் மத்தியில் நான் பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு காசிக் கயிறு கட்டியிருந்தாள் ஒரு பெண் போராளி. 'நொடியில் சாகும் சயனைடைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆயுளைக் காப்பாற்றும் என்று இந்த காசிக் கயிற்றை எந்த நம்பிக்கையுடன் கட்டியிருக்கிறாய் தங்கச்சி?' என்று நான் கேட்டது அப்படியே பிரபாகரன் காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் கடவுள் நம்பிக்கை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'சின்ன வயசுல இருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஏன்னு தெரியலை. தமிழர்களுக்குத் துரோகம் செய்த துரையப்பாவைச் சுட, முதன்முதலா ஆயுதம் தூக்கிப் போனப்ப அவர் கிருஷ்ணன் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு இருந்தாரு. குறிபார்க்கும்போது கிருஷ்ணர் முகம்தான் தெரிஞ்சது. 'அநியாயத்தை அழிக்க யுகம்தோறும் அவதாரமா வருவேன்' அப்படின்னு நீதானே சொன்னே என்று நினைத்துக்கொண்டே சுட்டேன். துரையப்பா செத்துட்டாருன்னு பிறகு தகவல் வந்து சேர்ந்தபோது, 'கிருஷ்ணர் என் பக்கம்'னு நினைத்தேன்.

எங்க போராட்டத்துக்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பணம் கொடுத்தார். அதை எப்படியாவது பாதுகாப்பா இங்க கொண்டு வரணும்னு கவலைப்பட்டபோது, எனக்குத் திரும்பவும் கடவுள் நினைவு வந்துச்சு. பழநிக்குப் போய் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டேன். கிட்டு இறந்ததற்குப் பிறகுதான் எந்தக் கணத்திலும் கடவுள் எண்ணம் தோன்றாத முழு நாத்திகனா மாறிட்டேன்' என்றார்.

தமிழோடு பல வார்த்தைகளை ஆங்கிலத்தில் இருந்தே எடுத்துப் பயன்படுத்துவது குறித்து நான் போராளிகளிடம் சற்றே கேலியாகப் பேசியிருந்தேன். அதைப் பற்றியும் அடுத்து விளக்கினார் பிரபாகரன். 'தமிங்கிலீஷ்ல பேசுவதாகச் சொன்னீங்களாமே. அது உங்க நாட்டுல இருந்து இங்க இறக்குமதி ஆனதுதான். ரொம்ப நாள் வரை அப்படி இங்கே இல்லை. சமாதான காலத்துல உங்க நாட்டு டி.வி-யை இங்கே திறந்துவிட்டதன் விளைவு அது. தமிழீழம் மலரும்போது தமிழ் தமிழாக மட்டுமே இருக்கும்!' என்றார்.

அடுத்து பேச்சு, திரைப்படங்கள் குறித்துத் திரும்பியது. அடுத்து 'கோபம்'னு ஒரு படம் செய்யப் போவதாகச் சொன்னேன். 'அது சம்ஸ்கிருத வார்த்தை. சினம் அல்லது சீற்றம்னு பேர் வைங்களேன்' என்றார் தமிழேந்தி. உடனே தலைவர், ' 'கோபம்'னு சொல்ற வார்த்தைக்கு இருக்கிற உணர்ச்சி அதுல இல்லை. அதனால 'கோபம்'னே இருக்கட்டும்!' என்றார். மேலும், 'தம்பி' மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ணுங்கள், 'வாழ்த்துகள்' மாதிரி தேவையில்லை என்பது அவரது எண்ணம். 'பூக்கள், பறவைகள் என்று மென்மையான விஷயங்கள் எதற்கு நமக்கு? படத்துலயும் அடிக்கணும்... நிஜத்துலயும் அடிக்கணும். அதுதான் அடிமை விலங்கை உடைக்கும்' என்றார். தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்தார். நம்ம போராட்டத்தை முழுமையாகப் புரிஞ்சுக்கிட்டு ஆதரிக்கிற நடிகர் சத்யராஜ்னு சொன்னேன். சந்தோஷப்பட்டார். விஜய் பற்றிப் பேசிட்டு இருந்தப்ப, 'யாழ்ப்பாணத்துக்காரரின் பெண்ணைத்தானே அவர் திருமணம் செய்திருக்கிறார்' என்று நினைவுபடுத்திக்கொண்டார். 'பாலாவும் சேரனும் நம்ம போராட்டத்தின் நியாயத்தை ஆதரிப்பவர்கள்தானே' என்று என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். அமீர் பற்றி அதிகம் விசாரித்தார். அவருக்கு 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' மாதிரி ஈழப் போராட்டத்தை ஒரு படமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. எத்தனையோ பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்தும், முடியாமல் போனதைச் சொல்லி வருத்தப்பட்டார். 'பாலுமகேந்திராவை மட்டும் இங்கே கொண்டுவந்து சேர்த்திருங்க. அவரை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்'னு மெய்சிலிர்த்தார். திடீர்னு என்னை நினைத்தாரோ, 'சிவாஜிக்குப் பிறகு வடிவேலுவைக் கொண்டாடுறீங்க. எனக்கும் வடிவேலுதான் தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான கலைஞன் மாதிரி இருக்கு. நடக்கட்டும்... நடக்கட்டும்!' என்றார்.

சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தைகள்தோல்வி யில் முடிந்தது பற்றி அடுத்து பேசினார். 'வன் முறைக்கு அதை விஞ்சும் வன்முறைதான் பதிலாக இருக்க முடியும். சுமாரான வன்முறையை வைத்து வெற்றி பெற முடியாது. வலிமை உள்ளவன் வெல்வான். எனக்குப் பிறகும் இந்தப் போராட்டம் நடக்கும். என்னுடைய கவலை இளைய தலைமுறை இந்தப் போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரியவைக்க நீங்கள் உங்களது பேச்சைப் பயன்படுத்த வேண்டும்' என்றார். 'பேசிப் பேசித்தான் காலங்கள் கரைந்து விட்டன. இனிமேல் பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்றேன். 'இல்லை தம்பி, பேச்சும் ஒரு படையணிதான். என் துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் வார்த்தைக்கும் உன் வார்த்தைக்கும் ஒரே அளவு வலிமை உண்டு. அதே போல் சினிமாவும் ஒரு படையணிதான். தமிழனுக்குத் தலைவனாக வருபவன் சாகத் துணிந்தவனாக இருக்கணும். சாகப் பயந்தவன் தரித்திரம். சாகத் துணிந்தவன் சரித்திரம். இந்தா இருக்காரே...' என்று ஒருவரைச் சுட்டிக் காட்டினார் பிரபாகரன். 'இவர்தான் கடாபி. என் பாதுகாவலர். சாதாரணத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர். உங்கள் நாட்டில் இப்படியருத்தர் இருந்தால், அனைத்து உச்ச விருதும் கொடுத்திருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் பயிற்சிதான் காரணம். கடுமையான பயிற்சி... எளிதான சண்டை! இது தான் இங்குள்ள தத்துவம்' என்றார்.

அவரது உடம்பு கனமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதைக் கேட்டேன். 'குண்டாக இருக்கிறேனே தவிர, எனக்கு எந்த நோயும் இல்லை!' என்றார். நன்றாகச் சாப்பிடுகிறார். 'இங்கு நடக்கும் சமையலுக்கும் நான் தான் டைரக்ஷன்' என்றார். ராணுவம் சம்பந்தமாக ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. முக்கியமானவை அனைத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தார்.

எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும்போது எல்லாம் அவரது முகம் மலர்கிறது. அவர் அமைப்புக்குச் செய்த உதவி பற்றி எல்லாம் சிலாகித்துச் சொன்னார். அமைதிப்படையுடன் விடுதலைப் புலிகள் சண்டை போட்டுக்கொண்டு இருந்த காலத்தில், திடீரென்று ஒருநாள் கிட்டுவை அழைத்த எம்.ஜி.ஆர், ஒரு பெட்டியில் 36 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துக் கொடுத்தாராம். 'உங்களது நாட்டை எதிர்த்துப் போரிடும்போது எம்.ஜி.ஆர். கொடுத்தார். 'அது தேசத் துரோகமா?' என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. எங்களது நோக்கத்தை மட்டும்தான் பார்த்தார்!' என்று வார்த்தைகளில் அத்தனை நன்றி தொனிக்கப் பேசிக்கொண்டே இருந்தார்.

அவரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, என்னுடன் இருந்த சேரலாதனிடம் அதைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. 'ஏன்?' என்று கேட்டேன். அது உங்களுக்கும் தலைவருக்குமான தனிப்பட்ட சந்திப்பு. அது பற்றி எனக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றவர், 'இங்கு தலைவர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர். மற்றவரில் யாரும் துரோகியாகலாம். நான் உட்பட!' என்று கூறி நிறுத்தினார். என் இதயம் அதிர்ந்து அடங்கியது. மயூரி என்ற காயம்பட்ட பெண் போராளிகளின் காப்பகத்துக்குச் சென்றேன். 'கண்டேன் பிரபாகரனை' என்று அங்கிருந்த தங்கை யிடம் சொன்னேன். 'யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது. நீங்கள் இந்த இனத்துக்கு உண்மை யாக இருங்கள்' என்றாள் அவள்.

உண்மையாக இருக்கவே போராடி வருகிறேன்.''

''இனியும் காண்பீர்களா பிரபாகரனை?''

''ஆம். காண்பேன்! 20 முறை அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். அவர் மீண்டு வந்திருக்கிறார். அமைதிப்படை கொன்றதாகச் சொன்னார்கள். வந்தார். சுனாமியில் அடித்துப் போய்விட்டார் என்றார்கள். மீண்டும் வந்தார். கால் கருகிப்போய், ஒரு காலை எடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். அதுவும் பொய். அவரது கால் நன்றாகத்தான் இருந்தது. இப்போதும் அவர்களது ஆசைப்படி இறந்திருக்கிறார். பார்க்கலாம். அவரது வருகைக்காக நாங்கள் வழக்கம் போல் காத்திருக்கிறோம்!''

நம்பிக்கையும் உறுதியுமான வார்த்தைகள்!

ட்ரைவர் BMW Z4 என்ற மாட்ல் காரை சுமார் 225 கி.மி வேகத்தில் ஒரு கங்காரு மீது எதிர்பாராமல் மோதி விட்டது.

அடுத்தவினாடி கங்காருவை காணவில்லை, காரை நிறுத்திவிட்டு ஆச்சரியத்தொடு கங்காருவை தேடிப்பார்த்தால் .....................




கிழ் பார்க்கவும்


























நமக்கு தெரியாத சில குறிப்புகள்

1. To bring out the Shortcuts on your Screen/Desktop-> Settings/Personal/Home Screen/Home Screen Theme and select Shortcut bar, you can then select which shortcut to display if goto "Shortcuts". This will also bring out the "Track" playing being displayed when you open the Music Player.

2. Tap the Clock to bring out the Clock menu and make your alarm, alarm repeat is now built-in.

3. Tap the "General" or Date (the set Profile besides the clock) and the Profile selection menu pops out, almost similar to pressing the "Power" button in all S60, but here the Remove memory is not shown, but "Calendar" shortcut is included and the other profiles as well.

4. If you are on the Numeric Keypad, pressing the [#] key alternately will toggle the General and Silent Profiles, same as before, which means long press on zero [0] will bring out bookmarks for the Web.

5. Tapping on the displayed To do or Calendar entry will bring you immediately to that particular item.

6. Tapping the Active Icon on the Top Left (near the battery indicator) will give you shortcuts for any of the active icons.

7. Long press on the Green Call Button will still activate the Voice Command Prompt

8. Long press on the center button is similar to the Long press on the "Menu" key (the yin-yang key on most S60) which will bring out the menu for all the active applications.

9. Go to Applications/File Manager and setup "Backup" for automated backup schedule of your phone data.

10. How to update your Nokia 5800 firmware using your phone.
Presss *#0000# to display phone factory information and firmware
Now press options and select check for updates
The newest update is sent to your phone from nokia
Download and install updates.
This is done using GPRS or WIFI Connectivity.


General Tips
=========
1. Use Dialer and press # for about 2 seconds will switch the profile between Silent and General; press and hold 0 will open the web browser; press and hold 1 will open the voice mailbox

2. There is a shortcut key for Music, Gallery, Share, Video, Web shortcut at the top right corner just below the front camera

3. Press and hold the Green caller button when standby mode will activate the voice command. You could call the name from the contact or application name.

4. Organize your sms by grouping them like outlook by Messaging -> Option -> Setting -> Text message -> Other -> Show messages in groups -> Yes

5. Notification light will blink if there is unread sms/missed call. It could be turned off at Settings -> Notification light -> Off

6. If the touch input is not accurate, you could calibrate your screen at Touch Input-> Touch Screen Calibration -> ( Tap around the 4 dots at the corner)

7. Turning control functions:
a. Rotate your screen horizontal or vertical
b. Silence your phone for incoming call by rotate your phone with screen facing down.
c. Snooze the alarm by rotating phone screen facing down

8. Theme effect will give 3D and transition effect if on but will slow down your tube considerably. Settings -> Personal -> Themes -> General -> Themes effects -> On/Off

9. Shortcut to exit application : Press and hold the middle white button then press and hold the program that you wish to quit, an open/exit option will pop out (useful for those haven’t install handy taskman yet)

10. When using handwriting input, slide from left to right is Spacebar, right to left is Backspace

11. Organize your menu by Menu -> option -> organize. You could drag and drop the location of the application you wish to relocate.

Battery saving Tips
==============

1. Always turn off wireless scanning, Bluetooth when not in use
2. For those not using 3G, choose your network mode to “GSM” instead of “Dual mode” which will consume more battery. Settings -> Connectivity -> Network mode -> GSM
3. Less Display Light
a. Setting -> Phone -> Display -> light sensor (move the slider to the left)
b. Setting -> Phone -> Display -> Light Time-Out (lesser time to save battery but annoying if too short while you are playing games)
4. Always terminate the application properly that is not using by using Option ->Exit. It might be running background and consuming battery which you don’t know.


Memory Saving Tips
==============
1. Restart your phone if the memory less than 30MB, you could either soft reset (User a dialer and dial 5 * * then call) or hard reset by pressing the power button

2. Use Handy Taskman to close all application regularly or kill application that is not in use.


Camera & Picture tips
================
1. Some noise could be reduced if set the ISO sensitivity to low instead of auto.

2. When viewing pictures, you could use your stylus to view for previous (slide left) or next (slide right) picture like iphone feature.

Video
====
For converting video that is high quality to play at 5800, should use the mp4 format as below (All is 16:9 widescreen):
a) Xvid @ 678kbps resolution 480×272
b) Xvid @794kpbs resolution 640×352
c) H.264 @ 512kbps resolution 400×224
d) H.264 @ 550kbps resolution 400×224 (Recommended)

Music tips
=======
1. If you can’t find your songs after transferring from your pc to memory card, go to music player -> Option -> Refresh library


Application Tips
=============

1. Always install your phone theme on the memory cards. This is because if some theme does not work (Christmas tree) then you need to flash your phone.

2. Uninstall your application in proper way. Use Menu -> Setting -> Application mgr. -> Installed apps -> Choose application then option n uninstall

5800 Hard Reset(credit goes to Phat )
=============
WANNA HARD RESET YOUR NOKIA 5800 XM?

JUST PUT *#7370# AND THEN PUT LOCK CODE(I.E 12345) BACK UP YOUR PHONE MEMORY BEFORE DOING THIS

NEW LOCK CODE METHOD FOR NOKIA 5800XM

PRESS GREEN KEY + RED KEY + CAMERA KEY WHILE BOOTING YOUR 5800 JUST PRESS IT UNTIL YOUR DEVICE RESTARTS

This method is for nokia 5800 XM WITH F.W 20 AND UP


நல்லா இருந்தா ஒட்டு போடுங்க

கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...



ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா



அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது



உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!




காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.



மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

ஐந்து கேள்விப்பா

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்

வெரிகுட் கீபிடப்



டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????




என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.




நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.




டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!




வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..




சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...




''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''




ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!




உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.




இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...





திருமணத்திற்கு முன்

அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?

அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..

அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..

அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?

அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…

அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?

அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….

அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?

அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…

அவள் : என்னை அடிப்பீர்களா?

அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!

அவள் : நான் உங்களை நம்பலாமா?

அவன் : ம்ம்ம்.

அவள் : அன்பே…!

திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்




அண்மையில் சென்னை - வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையில் 'இதய ஆரோக்கியம்' குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அதில், இதய நோய்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களையும், நமது வாழ்க்கை முறையினால் இதய பாதிப்பில் சிக்காமல் இருப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் பிரபல மருத்துவர்கள் விரிவாகவே விளக்கமளித்தனர்.

அதன் முக்கிய அம்சங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு...

நம் இதயத்தை பற்றி முதலில் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதயத்தின் பாதிப்புகளில் இருந்து சமாளிக்கத்தான் மருந்துகள் இந்த உலகில் உள்ளதே தவிர, அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது தான் முதல் உண்மை. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்... ஒவ்வொரு மருந்தும் நமக்கு உதவிகள்தான் செய்கிறதே தவிர, போரிட்டு அந்த நோயை வெள்ள முடியாது!

பைபாஸ் சர்ஜரி, ஏன்ஜியோ பிலாஸ்ட் ஆகிய சிகிச்சைகள் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கு உதவி செய்கிறது. இதயத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை தட்டிவிட்டோ அல்லது அந்த பாகத்துக்கு பதில் வேறு குழாயை வைப்பது என அனைத்தும் நம் இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு மருத்துவர்களால் செய்யப்படும் ஒரு சிறு உதவிகள் மட்டும் தான். இதில் பேஸ்மேக்கரும் விதிவிலக்கல்ல.

ஆண்டுதோறும் ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆசியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயது முதல் 26 வயதுக்குள் இருப்பவர்களும் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இதயக் கோளாறா என்று நீங்கள் ஆச்சரியபடுவது புரிகிறது. ஆயினும், இது நமது சமூகத்தில் புதிதல்ல என்கின்றனர், மருத்துவர்கள். ஆண்டுதோறும் பல்லாயிரம் குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது அண்மைப் புள்ளிவிவரம்.

'30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் மாரடைப்பு வரும்' என்று இன்றும் பல பேர் நம்புகிறார்கள். அது முற்றிலும் தவறு. தற்பொழுது சராசரி 26 வயதுக்குள் இருப்பவர்களும் வந்துவிடுகிறார்களாம். இந்த வயது எண்ணிக்கை மேலும் குறையலாம் என்பது வருத்தத்துக்குரிய மருத்துவர்களின் புதிய கணிப்பு.

நமது ரத்தக் குழாயில் எல்.டி.டி(Low Density Lipo) தான் நமக்கு இதய நோய் தொடர்பான குறைகளை எல்லாம் அழைத்துவரும் நண்பராக இருக்கிறது. இதைக் குறைக்கத்தான் முடியுமே தவிர, முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.

இதய நோய் பிரச்னையில் மிகவும் பரிதாப நிலை கொண்டவர்கள் யார் என்றால், சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான். இவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் கூட இவர்களுக்கு தெரிவதில்லை என்பது தான் உண்மை. காரணம்..? சர்க்கரை நோய் தாக்கியவர்களுக்கு நரம்புகள் பலகீனமடைவதால், அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்பொழுது வலி அதிக அளவில் இருக்காது. எதேச்சையாக பலவீனம், தலைசுற்று என்று பக்கத்தில் இருக்கும் மருத்துவர்களிடம் செல்லும் பொழுது மருத்துவருக்கு சந்தேகம் வந்து, இ.சி.ஜி. எடுத்துப் பார்க்கும்பொழுதுதான் அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது என அறிய முடிகிறது என்பது வேதனையான உண்மை. ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்றுக் களைப்படைந்தாலும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சாதாரண மனிதர்கள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுவே சர்க்கரை நோய் தாக்கியவர்களாக இருப்பின், கண்டிப்பாக 2 அல்லது 3 மாததுக்கு ஒரு முறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்துக்கான ஒரே மருத்துவரை தேர்ந்தெடுத்து, அவரிடமே சிகிச்சை செய்து கொள்வது மிக மிக அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்... நமது உடலில் கெட்ட ரத்தம் (Bad Blood), நல்ல ரத்தம் (Good Blood) என இரண்டு வகையாக ரத்தத்தை மருத்துவ நிபுணர்கள் பிரித்துக் கூறுகிறார்கள். உதாரணமாக, நமது கையின் மேல் இருக்கும் கருப்பான நரம்புகள் அனைத்தும் கெட்ட ரத்தத்தைதான் கொண்டு செல்கின்றது. இதை நீங்கள் தொட்டுப் பார்த்தால், உங்களால் ஒன்றுமே அரிய முடியாது. இந்தக் கெட்ட ரத்தம் முழுக்க முழுக்க குறைந்த அழுத்தம் (Low Pressure) வகையை சேர்ந்ததால் தான் உங்களால் இதன் தன்மையை உணர முடியா நிலை ஏற்படுகிறது.

நல்ல ரத்தம் எங்கேதான் ஓடுகிறது என கேட்கிறீர்களா? நம் உடலில் எல்லா பாகங்களிலும் இந்த இரண்டு வகை ரத்தங்கள் சென்று வந்து தான் கொண்டிருக்கிறது. நம் கை உள்ளங்கை கீழே இருக்கும் நரம்பின் இடையில் ரத்த ஓட்டத்தை தொட்டுப் பார்த்தால் இதன் துடிப்பை நீங்கள் நன்றாக உணரலாம். இதற்கு காரணம் இந்த ரத்த நரம்புகள் உயர் அழுத்தத்தை (High Pressure) சேர்ந்ததுதான். உங்கள் காய்ச்சலுக்கு டாக்டர்கள் உங்கள் கையைப் பிடித்து பல்ஸ் பார்ப்பதை அறிந்திருப்பீர்கள். அவர் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் இருக்கும் வாட்சைப் பார்ப்பார். இத்தனை வினாடிக்கு இத்தனை துடிப்புகள் என கணக்கு வைத்து உங்களின் உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு என்பது முதற் கொண்டு நன்கு அறிந்து, அதற்கு தகுந்த மருந்துகளை கொடுப்பதும் இந்த நல்ல ரத்தம் ஓட்டத்தை வைத்துதான்.

ஒரு மனிதனுக்கு சராசரி உயர் ரத்த அழுத்தம் 120/80 இருக்க வேண்டும். வயதுக்கேற்ற வகையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 40 வயதிலும் இதே அளவு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த வயத்துக்குப் பிறகு ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

நீங்கள் நடக்கும்பொழுது அதிகமாக மூச்சு வாங்கினாலோ அல்லது உங்கள் கண்கள் தலையை சுற்றுவது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டாலோ நீங்கள் உங்கள் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். (நடந்து கொண்டிருக்கும் போதே திடீர் இதய பாதிப்பால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து ஏற்படும் மரணம் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்க.)

இயன்றை வரையில் நெய் வகை இனிப்புகளை சுவைப்பதைத் தவிருங்கள். ஐ.டி. முதலிய துறைகளைச் சேர்ந்தவர்கள் நொறுக்குத் தீனியாக இனிப்பை மிகுதியாக சாப்பிடுவதால், எல்.சி.டி. கொழுப்பு அதிகரித்து, வயது வித்தியாசமினிறி இதயம் பலகீனமாக்கும் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

"நானெல்லாம் காலையில் எழுந்ததும் வாக்கிங் பொயிடுவேன். அப்பறம் தான் உடற்பயிற்சி," என்று அதிகாரமாக சொல்பவராக நீங்கள் இருந்தால்... அது நோ யூஸ்! காலையில் எழுந்ததும் சிறிது வார்ம் அப் செய்ய வேண்டும். முதலில் தலையில் ஆரம்பித்து, அடுத்து தோள்கள், முக்கியமாக இடுப்பை முன்பும் பின்புமாக நன்றாக வளைத்து, இறுதியாக நமது பாதங்களுக்கு சிறு பயிற்சி கொடுத்த பிறகுதான் ஜாகிங் அல்லது வாக்கிங் செய்யவேண்டும். இப்படி செய்தால்தான் நீங்கள் நினைத்த மாதிரி உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடியும். இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

அதிகாலையில் எழுந்ததும் சுடச்சுட பால் ஆடையுடன் பாலோ அல்லது டி, காபி குடிக்கும் நபராக இருந்தால், தயவு செய்து அதை மறந்துவிடுங்கள். எருமைப் பாலை விட பசும்பால் குடிக்கலாம் அல்லது புரதச்சத்து குறைந்த பாலை தேர்ந்தெடுத்துப் பருகலாம். எதை குடித்தாலும் பாலாடையை எடுத்துவிட்டு, சற்று தண்ணீர் நிலையில் இருக்கும் பாலை குடிப்பதுதான் நல்லது. இதில் 18 வயது வரை இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் உட்கார்ந்த நிலையில் சில பயிற்சிகளை செய்யலாம். 3 மாதம் பிறகுதான் மற்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். உடலை வளைப்பது, குனிவது போன்ற பயிற்சிகளை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்.

ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டவருக்கு சலிப்பிடித்து இருமல் ஏற்பட்டால், இதயத்தில் சிறு கணம் கொண்ட தலையனையை இதமாக அனைத்துக் கொண்டுதான் இரும வேண்டும். அதேநேரத்தில், அதிகப்படியாக 1 கிலோ அல்லது 1 லிட்டர் கணத்தைத்தான் தூக்க வேண்டும். கண்டிப்பாக பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் சர்ஜரி முடிந்து, 3 மாதங்களுக்கு மட்டும்தான். 6 மாதம் வரை சரியாக கடைபிடித்துவிட்டால் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

அசைவ பிரியர்களுக்கு மீன் மட்டும் தான் இதயத்துக்கு பலம் கூட்டும் சக்தியாக இருக்கிறது. அதற்காக, எண்ணெய்யில் பொறித்த மீன்களை அள்ளி சாப்பிடுவதும் தவறு. குழம்பு மீன்களை பிளேட் பிளேட்டாக உள்ளே தள்ளுவதும் தப்பு. வாரம் இரண்டு முறை ஒரு மனிதன் 100 கிராம் அளவில் தான் மீன் உண்ண வேண்டும்.

வீட்டில் ஒரே எண்ணெய்யை சமைப்பதும் முற்றிலும் தவறு என்று கூறும் மருத்துவர்கள் நல்லெண்ணை, கடலெண்ணை, மற்றும் தேங்கா எண்ணையை சரி அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையை பாட்டிலுடன் சாய்த்து உபயோகப்படுத்துவதற்கு பதில் டீஸ்பூன்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்தது.

கொள்ளூ ரசம் மற்றும் அன்னாச்சிபழம் நம் இதயத்துக்கு உற்ற நண்பர்கள். இவற்றை வாரம் 2 தடவை சுழற்சி முறையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதே போல் வெந்தயம், ஆரேஞ்சு பழங்கள் மற்றும் எலுமிச்சை பழங்களும் எடுத்துக் கொள்ளலாம்.

"ஹலோ சார் நான் இதை எல்லாம் கரெக்டா செய்கிறேன், இதனுடன் டிரெட்மில்லில் தினமும் ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் சூப்பரா வேர்க்க வேர்க்க ஓட்டம் எடுப்பேன்," என்று மார்தட்டி சொல்கிறீர்களா?

சோ சாரி சார்... ஒரு மணி நேரத்துக்கு 6.5 கிலோமீட்டர் தான் உங்கள் நடை பயணம் இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் 35 வயதுக்குள் இருந்தால் தான் வெயிட்களை தூக்கி பழகலாம். 35 கடந்தவர்கள் வெறும் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது.

அதிகபடியான மகிழ்ச்சி மற்றும் துக்கங்களில் நம்மை நாமே ஆழ்த்திக் கொள்வது மிக மிக தவறு. எப்போதும் சாதாரண மனநிலையிலேயே இருக்க வேண்டும். எதிலும் 'டேக் இட் ஈஸி' பாலிஸிதான் பெஸ்ட்!

"ஹய்யோ எனக்கு பைபாஸ் சர்ஜரியா?!" என்று எல்லோரையும் திகிலில் ஆழ்த்தாதீர்கள். தற்பொழுது பச்சிளம் குழந்தைக்குக் கூட இதை சர்வசாதாரணமாக நடைபெற்று வெற்றி வாகை சூடிய மருத்துவர்கள் முக்கிய நகரங்களில் இருக்கிறார்கள்.

35 வயதுக்குள் இருக்கும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால், அவரது தொடையோ அல்லது கால் முட்டியின் கீழோ இருக்கும் நரம்புகள் எடுத்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சரி செய்திருப்பார்கள். அதனால் காலின் முட்டி முதல் உள்ளங்கால் வரை கட்டுகள் போட்டிருப்பார்கள். அதை அலட்சியமாக விட்டு விடுவதும் நல்லது அல்ல. 3 முதல் 6 மாதம் வரை காலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

நம் முன்னோர்கள் சரியான நடைபயிற்சி, துணி துவைப்பது, வீட்டை மொழுகுவது, மாவாட்டுவது, நேரம் தவறாமல் உண்டது, அந்த உணவுகளை சரியாக மென்று உண்பது ஆகியவற்றால் தான் திடமாக இருந்தார்கள். அதனால், எந்த பிரச்னையை அவர்களால் எளிதில் சமாளிக்க முடிந்தது. அது மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி, சங்கடத்தை கொண்டதாக இருந்தாலும் சரி அவர்களை அதிகமாக பாதித்தது இல்லை.

ஆனால் இன்றோ... இதை நாம் எதை முழுமையாக செய்கிறோம்? அதிவேக உலகமாகிவிட்டது. எதிலும் வேகம், அவசரம். நில்லுங்கள் சற்று சிந்தியுங்கள்.

கண்டிப்பாக குடி மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முதலில் முழுவதுமாக கைவிட வேண்டும். இது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். இவ்விரண்டும் தான் இதய பாதிப்புக்கு முக்கியக் காரணிகளில் முன்னிலை வகிப்பவை.

அதேபோல், மூன்று விஷயத்தை தவிர்த்துவிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. அவை... கறி (Meat), ஹர்ரி Hurry & ஸ்கேரி (Scary).

இவன்

My photo
முதுநிலை நிரலர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

இன்றய குறள்


Followers

Blog Archive